Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 29 செப்டம்பர், 2012

விறகு மூலம் மின்சாரம் தயாரிப்பு "யூனிட்' மூடல்


மதுரை மாவட்டம் பேரையூரில் ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட, விறகு மூலம் மின்சாரம் தயாரிக்கும் "யூனிட்' மூன்றாண்டுகளாக மூடிக்கிடக்கிறது.பேரையூர் பேரூராட்சிக்கு மின்தேவையை பூர்த்தி செய்ய, சமன்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்தில் 2006ல் இந்த "யூனிட்' அமைக்கப்பட்டது. சீமை கருவேல் மரக் குச்சிகளை காய வைத்து, துண்டுகளாக வெட்டி, அவற்றை எரிப்பதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகம், குடிநீர் வினியோகத்துக்கான மோட்டார் இயக்கம், பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள விளக்குகள், கடைகளுக்கு தேவையான மின்சாரம், இந்த யூனிட்டில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த யூனிட் துவங்கி சில மாதங்கள் மட்டும் செயல்பட்டது.

இதை இயக்கும் ஆப்பரேட்டர்கள் பற்றாக்குறை காரணமாக காலப்போக்கில் யாரும் இந்த யூனிட்டை கண்டுகொள்ளவில்லை. மூன்றாண்டுகளாக மூடப்பட்டு, தயாரிப்பு இயந்திரங்கள் துருபிடித்து உள்ளன. தற்போது நிலவும் மின்தட்டுப்பாட்டில் இந்த யூனிட்டை செயல்படுத்தினால், பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோக மோட்டாருக்கு மின்சாரம் கிடைக்கும். மின் தடையால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு வராது. பேரூராட்சி நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை. ரூ.பல லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் வீணடிக்கப்படுகின்றன.
பேரூராட்சி நிர்வாக அலுவலர் கலையரசி கூறுகையில், ""விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாள் ஒன்றுக்கு எத்தனை மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம் என்ற விவரம் எனக்கு தெரியவில்லை,'' என்றார்.மின் தட்டுபாடு நேரத்தில் இத்தகைய யூனிட்டுகளை பேரூராட்சி நிர்வாகங்கள் இயக்கி, மின் தேவையை பூர்த்தி செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக