Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 23 அக்டோபர், 2012

நெல்லை மாவட்டத்தில் சேதமடைந்த பஸ்கள் இயக்கம் பயணிகளுக்கு ஆபத்து


நெல்லை யில் அரசு மற்றும் தனியார் மூலம் இயக்கப்படும் பஸ் கள் ஓட்டை உடைசலாக காணப்படுகின்றன. இத னால் பயணிகளின் உயி ருக்கு பாதுகாப்பற்ற சூழ் நிலை நிலவுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 கோட்டங்கள் உள்ளன. இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான பஸ்கள் பல் வேறு பகுதிகளுக்கு இயக் கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் பராமரிப்பு இல்லாமல் பழு தடைந்த நிலையில் உள் ளன. இதனால் பொதுமக் கள் தினமும் அவஸ்தை பயணத்தை அனுபவித்து வருகின்றனர்.

பொதுவாக புதிதாக இயக்கப்படும் ஒரு பஸ் அதிகபட்சம் 5 லட்சம் கிமீ தூரம் மட்டுமே இயக்கப்பட வேண்டும். பின்னர் அந்த பஸ்சின் இன்ஜினை மறு சீரமைப்பு செய்து அதில் தேய்மானம் அடைந்த உதிரி பாகங்களை மாற்ற வேண்டும். ஆனால் நெல்லை கோட்டத்தில் அதிகமான பஸ்கள் 12 லட்சம் கி.மீ. தாண்டியும் கிராமபுறங்களுக்கு இயக்கப் பட்டு வருகின்றன. இதில் மேலப்பாளையம், கோபா லசமுத்திரம், மேலச்செவல் போன்ற பகுதிகளுக்கும் பழைய பஸ்கள் இயக்கப்ப டுகின்றன.
இதற்கு காரணம் 1997ம் ஆண்டுக்கு பிறகு போக்குவ ரத்து கழகத்தில் தொழில் நுட்ப பணியாளர்கள் பற் றாக்குறை ஆகும். இதனால் பஸ்கள் பராமரிப்பு பணி மோசமானது. இந்நிலையில் நெல்லை கோட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 263 புதிய பஸ்கள் தற்போது பல பகுதிகளில் இயக்கப் பட்டு வருகின்றன. ஆனால் கிராமப்புறங்களுக்கு பழைய பஸ்கள் இயக்கப்படு வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதேபோல் நெல்லை மாநகர பகுதியில் இயக்கப்ப டும் தனியார் பஸ்கள் பல ஓட்டை உடைசலாக உள் ளன. இந்த பஸ்கள் வருமா னத்தை மட்டுமே குறிக்கோ ளாக கொண்டு இயக்கப்படு கின்றன. படிக்கட்டுகள் உடைந்தும், பஸ்சின் பின் பக்க கண்ணாடி இல்லாம லும் பஸ்களை இயக்கும் நிலை நீடித்து வருகிறது. மினி பஸ்கள் பல பராமரிப் பின்றி பொதுமக்களையும், இரு சக்கர வாகன ஓட்டிக ளையும் மிரட்டும் வகையில் இயக்கப்படுகின்றன.
சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அள வுக்கு அதிகமாக பொருட் களை ஏற்றிச்சென்றால் போக்குவரத்து போலீசார் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். ஆனால் படிவரை பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களை அவர்கள் கண்டுகொள்வ தில்லை. தற்போது வண் ணார்பேட்டை வணிக நிறு வனங்களின் கூடாரமாக மாறிவருகிறது. இதனால் பயணிகளை ஏற்றி இறக்க அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் முண்டியடித்து செல்லும் நிலை தொடர்கிறது.

இதனை தவிர்க்க போக் குவரத்து போலீசார் கண் காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து போக்குவ ரத்து விதிகளை மீறி இயக் கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக நல ஆர்வலர் கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக