Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 23 அக்டோபர், 2012

சுற்றுச்சூழலியல் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்


இயற்கை சமநிலையை பாதுகாக்க, உலக நாடுகள் சுற்றுச்சூழலை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சுற்றுச்சூழல் பற்றிய படிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது படிப்பாக மட்டும் பார்க்கப்படாமல் சமூக சேவையாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் சுற்றுச்சூழலில் உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் இத்துறையில் பணிபுரிய விரும்புகின்றனர். சுற்றுச்சூழலியல் துறையில் இளநிலை, முதுநிலை மற்றம் டிப்ளமோ பாடப்பிரிவுகள் உள்ளன.

தகுதிகள்:
சுற்றுச்சூழல் பட்டப்படிப்புகளில் சேர விரும்புவோர், பிளஸ் 2வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை முதன்மை பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். அறிவியல் அறிவு, ஆராய்ச்சியில் ஆர்வம் மற்றும் தகவல் தொடர்பு திறன் இத்துறைக்கு இன்றியமையாதவை.

சுற்றுச்சூழலியல் பட்டப்படிப்புகள்:
* பி.எஸ்சி., சுற்றுச்சூழலியல் அறிவியல்
* எம்.எஸ்சி., சுற்றுச்சூழலியல் அறிவியல்
* பி.இ., சுற்றுச்சூழல் இன்ஜினியரிங்
* எம்.டெக்., சுற்றுச்சூழல்

இன்ஜினியரிங்:
* எம்.டெக்., சுற்றுச்சூழலியல் அறிவியல் மற்றும் இன்ஜினியரிங்
* எம்.டெக்., எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை
* டிப்ளமோ - சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலியல் அறிவியல் போன்ற படிப்புகள் இந்த துறையில் காணப்படுகின்றன.


கல்வி நிறுவனங்கள்:
இந்தியாவில் சுற்றுச்சூழலியல் கல்வி நிறுவனங்கள்.
* விவசாய பல்கலைக்கழகம், கோவை
* ‘ஸ்கூல் ஆப் என்விரான்மென்டல் சயின்ஸ்’, டில்லி
* எஸ்.என்.டி.டி., பெண்கள் பல்கலைக்கழகம், மும்பை
* டில்லி பல்கலைக்கழகம், டில்லி
* பி.இ.எஸ்., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், மாண்டியா
* எல்.டி., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், ஆமதாபாத்

வேலைவாய்ப்புகள்:

சுற்றுச்சூழலியல், ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நிறுவனங்களில் இத்துறையினருக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுற்றுச்சூழலியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. சுகாதார அமைப்புகள், இயற்கை சார்ந்த சமூக அமைப்புகள் போன்றவற்றிலும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

தகவல் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் சிறப்பான வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த துறையில் தனியார் நிறுவனங்களில் துவக்கத்தில் 10 ஆயிரம் ரூபாய் முதல் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழலியல் துறையில் பணிபுரிபவர்களுக்கு இயற்கையை காப்பாற்றும் மற்றும் சமூக சேவையில் ஈடுபடும் மனநிறைவு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக