Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 19 ஜனவரி, 2013

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக ராகுல் காந்தி தேர்வு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. வரும் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் கட்சியின் செயல்பாடு ஆகியவற்றை மையப்படுத்தி நடந்த இந்த கூட்டத்தில் உயர்மட்ட தலைவர்கள், நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், ராகுல் காந்தியை கட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும், அவரது தலைமையில் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் பெரும்பாலான தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின்னர், இன்று இரவு கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் இக்கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. அப்போது ராகுல் காந்தியை கட்சியின் துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி பரிந்துரை செய்தார். இதையடுத்து ராகுலை துணைத்தலைவராக நியமிப்பது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

ராகுலுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டிருப்பதால், அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது என்றும், சோனியாவுக்கு அடுத்தபடியாக கட்சியில் ராகுல்காந்தி செயல்படுவார் என்றும் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி தெரிவித்தார். இந்த அறிவிப்பை ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

ராகுல் துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டதை காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். இந்த மகழ்ச்சியை பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக