Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 25 மே, 2013

திருநெல்வேலி மாவட்டத்தில் தலை விரித்தாடும் வறட்சி 1.37 லட்சம் எக்டேரில் சாகுபடி பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் அணைக்கட்டுகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 765 மி.க.அடியாகும். இதில் தற்போது 3,139 மி.க.அடி கொள்ளளவு மட்டுமே உள்ளது. தற்போது அணைகளில் 23 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,449 குளங்களில் 2,427 குளங்கள் முற்றிலும் வறண்டுள்ளது. 16 குளங்களில் ஒரு மாதத்திற்கு மட்டும் தண்ணீர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாவட்டத்தில் கடந்த ஆண்டு 754 மி.மீ அளவுகளில் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 228.23 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் இயல்பான மழை அளவை விட 7 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் 2013-13ம் ஆண்டில் 1.41 லட்சம் எக்டேர் பரப்பில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை 4,621 எக்டேர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் 5,736 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.மாவட்டத்தில் உரங்களை பதுக்குதல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கவும், கண்காணிக்கவும் வட்டார அளவில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட்டார அளவிலான சிறப்பு குழுவின் உர ஆய்வாளர்/வேளாண்மை அலுவலர் மற்றும்வேளாண்மை உதவி இயக்குனர் இடம் பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக