Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 25 மே, 2013

ஆயுர்வேத மருத்துவ படிப்பு (BAMS)

தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேத மருத்துவமும், எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கு நிகரானதாகவேக் கருதப்படுகிறது. மேலும், நமது பாரம்பரிய மருத்துவ முறை என்பதாலும், பல தீராக வியாதிகளுக்கும் ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளது என்பதாலும் தற்போது ஏராளமானோர் ஆயுர்வேத மருத்துவர்களை நாடுகின்றனர்.

தமிழகத்தில் ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளை வழங்கும் 8 கல்லூரிகள் உள்ளன. அதில் 1 அரசுக் கல்லூரியும், 7 சுயநிதிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

இவை அனைத்துமே தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன்தான் செயல்படுகின்றன.

பி.ஏ.எம்.எஸ்.(BAMS)

பேச்சுலர் ஆப் ஆயுர்வேதிக் மெடிசின் அன்ட் சர்ஜரி என்ற ஆயுர்வேத மருத்துவ படிப்பு நான்கரை ஆண்டு கால படிப்பும், ஓராண்டு கால கட்டாய பயிற்சியும் சேர்ந்ததாகும். இப்படிப்பில் சேர பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்து படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தகுதியுடையவர்களாவர். வகுப்பறை பாடமாகவும், ஆய்வக பயிற்சியாகவும் இப்படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பை முடித்தவர்கள் அரசு மற்றும் தனியார் ஆயுர்வேத மருத்துவமனைகளில் பணி வாய்ப்பு பெறலாம். ஆயுர்தேவ மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியிலும் ஈடுபடலாம். மேற்கொண்டு முதுநிலை பட்டப்படிப்பும் படிக்கலாம்.

எம்.டி.(MD) 

இது ஆயுர்வேத முதுகலைப் படிப்பாகும். இரண்டு ஆண்டுகளைக் கொண்ட இப்படிப்பில் சேர இளநிலை ஆயுர்வேதப் படிப்பான பி.ஏ.எம்.எஸ். தேர்ச்சி பெற்று ஓராண்டு காலம் பயிற்சியையும் முடித்திருக்க வேண்டும்.

1. அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி

தமிழக அரசால் நடத்தப்படும் ஒரே ஆயுர்வேதக் கல்லூரி என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இப்படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் 40 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். எம்.டி. எனப்படும் முதுகலைப் பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலந்தாய்வு மூலமாக மாணவ சேர்க்கை நடத்தப்படுகிறது.
முகவரி : கோட்டாறு, நாகர்கோயில்

2. ஆயுர்வேதக் கல்லூரி, சூலூர், கோவை

1978ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு பிஏஎம்எஸ் மருத்துவப் படிப்பும். எம்.டி. எனப்படும் முதுநிலைப் படிப்பும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : 242பி, திருச்சி சாலை
சூலூர், கோவை - 641108

3. வெங்கடரமணா ஆயுர்வேதக் கல்லூரி, சென்னை

1979ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கல்லூரி சென்னையை அடுத்த பெரியார்நகரில் உள்ளது. இந்த ஆயுர்வேதக் கல்லூரியில் பி.ஏ.எம்.எஸ். படிப்பில் ஆண்டு தோறும் 20 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ எனப்படும் வளாகத் தேர்வு நடத்தப்பட்டு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : 596, ஏ1, ஏ2, 31வது சாலை, டிஎன்எச்பி காலனி,
பெரியார்நகர், கொரட்டூர்,
சென்னை - 600 080.

4. தர்ம ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரியான இதில் இருபாலரும் பயிலும் வசதி உள்ளது.  பி.ஏ.எம்.எஸ். படிப்பு மட்டும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 20 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : 17, கிராண்ட் வெஸ்ட் டிரங்க் சாலை,
ஸ்ரீபெரும்புதூர் - 602 105

5. ஸ்ரீசாய் ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி

2001ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த மருத்துவக் கல்லூரியில் ஆயுர்வேதப் படிப்பான பி.ஏ.எம்.எஸ். என்ற நான்கரை ஆண்டு கால படிப்பு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : சாய் லியோ நகர், பூந்தண்டலம்,
மேற்கு தாம்பரம், சென்னை - 600 044

6. ஸ்ரீ சங்கரா ஆயுர்வேதக் கல்லூரி, திருச்சி

2001ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கல்லூரி இருபாலரும் பயிலும் சுயநிதி மருத்துவக் கல்லூரியாகும். இளநிலைப் படிப்பான பிஏஎம்எஸ் படிப்பு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : சன்னசிப்பட்டி, திருச்சி - 620 006.

7. ஸ்ரீ ஜெயேந்திரர் சரஸ்வதி ஆயுர்தேவ கல்லூரி, நசரத்பேட்டை

1995ம் ஆண்டு வதுங்கப்பட்ட இந்த கல்லூரியில் இளநிலை ஆயுர்வேத மருத்துவப் படிப்பு வழங்கப்படுகிறது. இது சுயநிதி மருத்துவக் கல்லூரியாகும்.  ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : நசரேத்பேட்டை,
திருவள்ளூர் - 602 103

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக