Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 22 மே, 2013

தமிழகத்தில் காகித ஆலை அமைக்க விளை நிலம் ஆர்ஜிதம் - எதிர்த்து ஆர்ப்பாட்டம்


காகித ஆலை அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது மொண்டிப்பட்டி ஊராட்சி. இது ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. இந்த ஊராட்சியில் ரூ.1,200 கோடி செலவில் 989 ஏக்கர் பரப்பளவில் அரசு காகித ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. முதற்கட்டமாக நில ஆர்ஜித பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அதிகாரிகள் கையகப்படுத்தி வருவது விளை நிலங்கள் என்றும் இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் கூறி விவசாய நிலப்பகுதியை தவிர்த்து வேறு இடத்தில் காகித ஆலையை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஆனால் அரசு உத்தரவிற்கு இணங்க நில ஆர்ஜி தம் நடப்பதாக கூறி விவ சாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் தொடர்ந்தனர். இதனால் விவசாயி கள் விவசாய நில ஆர்ஜிதம் கண்டித்து போராட்டம் நடத்த விவசாய நில மீட்புக்குழுவை ஏற்படுத்தி போரா ட்டத்துக்கு தயாராகினர்.

முதற்கட்டமாக சென்னையில் முதல்வரின் தனிப்பிரிவு உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நில ஆர்ஜிதத் தை கைவிடக்கோரி நேரில் மனு அளித்தனர். பின்னர் தங் கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மணப்பாறை தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். போராட்டத்தை கைவிடக்கோரி ஆர்டிஓ பஷீர், காகித ஆலை ஆணைய அதிகாரி சீனிவாசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முடிவு எட்டப்படாததால் திட்டமிட்டப்படி நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு உள்ளிட்ட பயிர்களை ஏந்தியபடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் குருசாமி, ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ராணி, முன்னாள் ஊராட்சித்தலைவர் பாப்பாத்தி, காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு மாவட்ட தலைவர் முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டப்படி தாலுகா அலுவலகத்தில் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போராட்டக்குழு பிரதிநிதிகள் சிலர் மட்டும் அலுவலகத்துக்குள் சென்று தாசில்தார் குளத்தூர் பாண்டியனிடம் மனு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக