Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

உணர்வுமிக்க அரசியல் பாதையா ? உணர்ச்சி மிக்க அரசியல் பாதையா ? --- நம் முன் சென்ற சமுதாயத்தலைவர்கள் காட்டிய வழி என்ன ?

காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி  தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது , திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று திமுக தலைவர் அண்ணாதுரை தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் . ஆனால் ,அண்ணாதுரை தன ஆட்சியின் முதலாண்டை பூர்ஹ்தி செய்த நிலையில் மரண முற்றார் . பின்னர் தமிழக முதல்வராக திமுகவின் சார்பில் பதவியேற்றார் கருணாநிதி .

கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் முதன் முறையாக மதுக்கடை திறக்கப்பட்டது .அப்போது திமுக கூட்டணியல் இருந்த ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அனைத்து நிர்வாகிகளும் ,தொண்டர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர் , திமுக கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று தலைவர் காயிதே மில்லத்திற்கு கோரிக்கை வைத்தனர் . சிராஜுல் மில்லத் அ.க .ஆ . அப்துஸ் சமது சாஹிபு , நாவலர் AM .யூசுப் சாஹிப் , எம்.எம்.பீர் முஹம்மது சாஹிப் உள்ளிட்ட முஸ்லிம் லீக்கின் பிரச்சார பீரங்கிகள் மாநிலம் முழுவதும் முஸ்லிம் லீகின் கூட்டங்களில் மதுக்கடையை திறந்த திமுக -வினை எதிர்த்து வீர முழக்கமிட்டனர் .

இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுக்குழு தலைவர் காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் தலைமையில் கூடியது . பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் திமுக கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று பேசினார்கள் .இறுதியாக பேசிய தலைவர் காயிதே மில்லத் (ரஹ் ) அவர்கள் , மதுக்கடையை திமுக திறந்ததை நாம் கண்டிக்கிறோம் , மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோருகிறோம் . அதே நேரத்தில் ,திமுக -வா ? அல்லது எதிர் தரப்பா ? என்று நாம் நோக்கும் போது , முஸ்லிம் சமுதாயத்திற்கு திமுகவை விட எதிர் தரப்பு பாதகமாக உள்ளது ,எனவே ,திமுக உடன் கூட்டணி தொடரும் ,அவர்கள் திருந்த வேண்டும் ,அவர்கள் நம் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் , அவர்கள் தவறுக்கு அல்லா தண்டனை வழங்குவான் என்று கூறி திமுகுடன் கூட்டணி தொடரும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார்கள் ,பொதுக் குழு உறுப்பினர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு ஏற்றுக் கொண்டனர் . (தொடரும் ...............)

----------- ஜமிலா மைந்தன்

1 கருத்து: