Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 28 ஜூன், 2013

அடிப்படை வசதி இல்லாத பள்ளிகளை போலீசார் தத்தெடுத்தனர்

மதுரை மாவட்டத்தில் போதிய அடிப்படை வசதியின்றி செயல்படும் பள்ளிகளை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி மாவட்ட போலீசார் தத்தெடுத்தனர்.

வசதியின்றி செயல்படும் பள்ளிகள்
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், மதுரை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் பட்டியலை போலீசார் தயாரித்தனர். அதன்படி, பல்வேறு பள்ளிகள் அடங்கிய பெயர் பட்டியல் போலீஸ் சூப்பிரண்டு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

முடிவில், பழங்காநத்தம் வசந்தநகரில் உள்ள தியாகராசர் உயர்நிலைப்பள்ளி, சோழவந்தான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தத்தெடுக்கப்பட்டன. அதன்மூலம் அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளையும், அங்கு படிக்கும் மாணவ–மாணவிகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உரிய ஆலோசனைகளையும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதிக மதிப்பெண்
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறுகையில், 10, 12–ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக கல்வித்துறையின் ஒத்துழைப்பை கோரி உள்ளோம்.மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும். இதன்மூலம் பள்ளியில் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக