Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்வு தமிழகத்தில் ஜூன் 22ம் தேதி ஆரம்பம்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஜூன் மாதம் 22ம் தேதி கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்வுகள் ஆரம்பமாகிறது.தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டு தோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றிதழ் தேர்வு நடத்தப்படுகிறது.

 வரும் ஜூன் மாதத்திற்குரிய தேர்வுகள் 22ம் தேதி மற்றும் 23ம் தேதிகளில் நடக்கிறது. ஜூன் மாதம் 22ம் தேதி முதல் தாள் தேர்வு, 23ம் தேதி இரண்டாம் தாள் தேர்வும் தலா 2 மணி நேரம் நடக்கிறது.இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை வரும் மே மாதம் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் இளநிலை தமிழ் அல்லது ஆங்கிலம் டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

அரசு துறைகளில் தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்களாக பணியாற்றுபவர்கள் கண்டிப்பாக கம்ப்யூட்டர் ஆபிஸ் ஆட்டோமேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் இத்தேர்வுக்கான பயிற்சி மையங்களில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரும் ஜூன் மாதத்திற்கான தேர்வில் பங்கேற்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக