Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 18 ஜூன், 2013

புதுக்கோட்டையில் பள்ளி ஆசிரியை கற்பழித்துக் கொலை: உறவினர்கள் போராட்டம் , போலீஸ் தடியடி

புதுக்கோட்டை டவுன் காந்திநகரைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகள் தனபாக்கியம், 24. பெருங்குடி தனியார் நர்சரி பள்ளி ஆசிரியையாக பணியாற்றினார். கடந்த, 15ம் தேதி, பள்ளிக்கு விடுமுறை என்பதால், வீட்டில் இருந்துள்ளார். அன்று காலை, 9:30 மணிக்கு, மொபைல் போனில் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், பெற்றோரிடம், பள்ளிக்குச் செல்வதாக கூறி, சென்றுள்ளார்.

இரவு, 7:00 மணி வரை, வீடு திரும்பாததால், பெற்றோர், பல இடங்களில் தேடிப் பார்த்தனர்; எங்கும் காணவில்லை. இதை அடுத்து, போலீசில் கொடுக்கப்ப்டடது. போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். திருமயம் அடுத்த கண்ணங்காரைக்குடி, கண்மாய்க்கரையில், தனபாக்கியத்தின் உடல் கிடந்தது. தலை, நெற்றி, கழுத்து, மார்பு பகுதிகளில், பலத்த காயத்துடன், நிர்வாண கோலத்தில், கிடந்த உடலை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரை கடத்தி சென்ற மர்ம நபர்கள், கற்பழித்து கொலை செய்து, பிணத்தை வீசிச்சென்றது தெரியவந்தது. இளம்பெண் உடல், நேற்று, பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, பெண்ணின் உறவினர்கள், கொலையாளிகளை கைது செய்யக் கோரி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முன், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், தடியடி நடத்தி, அவர்களை கலைத்தனர்.  பெண் உட்பட, ஆறு பேரை கைது செய்தனர். கைது செய்தவர்களை விடுவித்தால்தான், பெண்ணின் உடலை பெற்றுக் கொள்வதாக உறவினர்கள் தெரிவித்தனர். போலீசார் மறுத்ததால், உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகம், நேற்று மாலை, 4:00 மணிவரை, பரபரப்புடன் காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக