Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 3 ஏப்ரல், 2013

நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரத்தில் புதிய தொழிற்பேட்டைகள்


நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில், நான்கு புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.சட்டசபையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கையில் இடம் பெற்றுள்ளவை:கடந்த, 2012-13ம் ஆண்டில், தஞ்சை பாளையப்பட்டி, வேலூர் வாணியம்பாடி, புதுக்கோட்டை மாத்தூர், விருதுநகர் ஆகிய பகுதிகளில், 10 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தொழிற் பேட்டைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள், தொடர்ந்து நடந்து வருகிறது.இந்நிலையில், நடப்பு நிதியாண்டான, 2013-14ம் ஆண்டில், நான்கு புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடி பிடாநேரி, தேனி மரிக்குண்டு, நெல்லை குருக்கல்பட்டி, விழுப்புரம் பட்டணம் ஆகிய இடங்களில், 20 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தொழில் பேட்டைகள் அமைக்கப்படுகின்றன.தகவல் தொழில்நுட்ப வசதிமாவட்ட தொழில் மையங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள், 4 கோடி ரூபாய் செலவில் மேம்படுகிறது.

இதன் மூலம், தொழில் முனைவோருக்கு உதவும் கூடுதல் கணினிகள், வலைதள வசதிகள் மற்றும் மென்பொருள் உருவாக்கம் ஆகியன மேற்கொள்ளப்படும். மாவட்டங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் புள்ளி விவர தொகுப்புகள் மேம்படுத்தப்படும்.மேலும், மாவட்ட தொழில் மைய அலுவலகங்களை, தொழில் வணிக ஆணையரகத்துடன் ஒருங்கிணைத்து, பல்வேறு இணையதள வாயிலான சேவைகள், தொழில் முனைவோருக்கு வழங்கப்படும்.மேம்பாட்டு திட்டம்படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்தல், புதிய தொழில் துவங்க திட்டங்கள் தயாரித்தல், ஆகிய உதவிகளை அளிக்க, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக, 2013-14ம் ஆண்டு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செயயப்பட்டுள்ளது.இவ்வாறு, மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக