Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 3 ஏப்ரல், 2013

மியான்மர் முஸ்லிம்களுக்காக ஏப்.14 ஜித்தாவில் கூடும் உலக முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு இலங்கை முஸ்லிம்களின் நிலை பற்றியும் பரிசீலிக்க வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


முப்பெரும் கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாட் டில் அனைத்து மாவட்ட தலைநகர் களிலும் ஏப்ரல் 2 செவ்வாயன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட் டத்தை தொடங்கி வைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

அப்போது அவர் கூறியதா வது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றுப் பெருமை பெற்ற பேரியக்கம். தேசிய ஒருமைப் பாடு, சமய நல்லிணக்கம், சிறுபான்மை மக்களின் கலா சார தனித்தன்மையை பாதுகாத்தல் ஆகிய லட்சியங்களை முன்னி றுத்தி பாடுபடுகிறது.

மத்திய அமைச்சர் இ. அஹமது தலைமையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லி லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சிறையில் வாடிக்கொண்டிருக்கும் அப்பாவிகளை விடுவிக்க முயற்சி மேற்கொண்டோம்.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு மாநில அரசுக ளுக்கு ஒரு தாக்கீதை அனுப்பி யது. விசாரணைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்களை மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து பரிசீலித்து விடுதலை செய்ய வேண்டும் என்று, ஆனால் அது அமல் படுத்தப்படவில்லை. பத்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்தோரை பேரறிஞர் அண்ணா அவர்கள் கருணை அடிப்படையில் விடு தலை செய்து தொடங்கி வைத் தார். ஜெயலலிதாகூட கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிட்டி ருக்கிறார். ஆனால், இப்போது விடுவிக்க மறுக்கிறார். எனவே, கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

2004-ல் ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம் லீக் வைத்த கோரிக்கையை யடுத்து நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிஷன், நீதியரசர் ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவை அமைக்கப்பட்டன.

இந்தியாவில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகத்தில் பெரும் பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஆனால், அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை விட கல்வியறிவு இல்லாமல் அன்றாடங் காய்ச்சி களாக கூலித் தொழிலாளிக ளாக, ரிக்ஷா இழுப்பவர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு கல்வி, பொருளாதார அடிப்படையில் அந்த மக்களை முன்னேற்ற வேண்டுமானால் தனியாக 10 சதவீத இடஒதுக் கீடு வழங்க வேண்டும். அதை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மிஸ்ரா குழு பரிந் துரை செய்தது.

ஆனால், சிறுபான்மையின ருக்கு 4.5 சதவீத இடஒதுக் கீட்டை மத்திய அரசு அறி வித்தது. நீதிமன்றத்தில் அதுவும் தடை விதிக்கப்பட்டு விட்டது.

மத்திய அரசு உடனடியாக 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும் என்று இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் முதல் கோரிக்கையாக எடுத்தி ருக்கிறோம். மத்திய அரசு முஸ்லிம்களுக்கு நியாயம் செய்வதாக கூறியது. ஆனால், கானல் நீராக பொய்த்து போய் உள்ளது.

அதேபோன்று தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு வழங்கிய 3.5 சத வீத இடஒதுக்கீட்டை தமழக அரசு உயர்த்தி தர வேண்டும்.

மத்திய - மாநில அரசுகள் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

இப்போது இளைய தலை முறையினர் மதுப் பழக்கத்துக்கு ஆளாகி வருகிறார்கள். ஆட்டை கடித்து மாட்டை கடித்து... என்று மனிதனையே கடித்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு மதுப் பழக்கம் ஆழமாக இளைஞர்கள் - மாணவர்கள் மத்தியில் பதிந்து வருகிறது. மது மனிதனை மிருகமாக்குகிறது. மதுவால் கொலை, கொள்ளை, பாலியல் பலாத் காரம் போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். நாங்கள் மதுக்கடைக ளுக்கு பூட்டு போடும் வேலையை செய்ய மாட்டோம். மனிதர்களின் மதுகுடிக்கும் மனக் கதவை இழுத்துப் பூட்டும் வேலையை செய்வோம். அதற் கான முயற்சி எடுப்போம். மது விலக்கால் ஏற்படும் தீமைகளை - கொடுமைகளை மக்களிடத் திலே பிரச்சாரம் வாயிலாக எடுத்துச் சொல்வோம். எங்க ளுடைய இந்த கோரிக்கைக ளுக்கெல்லாம் தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பையும், ஆதர வையும் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பின்னர் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதோடு, மியான்மரில் புத்த மத வெறியர்களால் ரோஹிங்ய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர் பாக பரிசீலனை செய்ய சவூதி அரேபியா ஜித்தாவில் ஏப்ரல்

14-ம் தேதி உலக முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் நிலை குறித்தும், அங்கு ஹலால் பிரச்சினை தொடர்பாக முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.இதுபற்றி அந்த நாடுகளின் கவனத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொண்டு செல்லும். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக