Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 17 ஜூன், 2013

கட்டாய திருமண பதிவுச் சட்டத்தை காட்டி இஸ்லாமிய திருமணங்களை தடுக்கப்படுவதை நிறுத்த வேண்டும் : ஜமாத்துல் உலமா சபை கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்உலமா  சபையின் தலைவர் எம். அப்துல் அஹது காஷிபி தலைமையில் முஸ்லிம்கள் அளித்த மனுவில்:

முஸ்லிம் தனியார் சட்டம் வழங்கிய திருமணச் சட்டத்தின் அடிப்படையில், பெண்கள் பருவத்தை அடைந்துவிட்டாலே, திருமணம் செய்வதற்கு தகுதி பெற்று விடுகிறார்கள். இந்த சட்ட உரிமையை சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ, உச்ச நீதிமன்றமோ பறிக்க முடியாது. இது முஸ்லிம் வாழ்வியல் சார்ந்த அடிப்படை உரிமையாகும்.

ஆனால் சமீப காலமாக குழந்தைத் திருமண தடைச் சட்டம் என்ற பெயரில் பருவமடைந்த முஸ்லிம் பெண்களின் திருமணத்தை, மாவட்ட ஆட்சியாளர்கள் மூலம் தடுத்து நிறுத்தப்படுகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய, வாழ்வியல் அடிப்படை உரிமையை சட்டத்தின் காவலர்களே அலட்சியம் செய்வது வேதனையளிக்கிறது. இந்த சட்ட விதிமீறல் இனியும் தொடரக் கூடாது. எனவே இந்த கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்களித்து, பள்ளிவாசல்களில் செய்யும் பதிவையே அரசுப் பதிவாக ஏற்க வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக