Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 26 மே, 2013

கொடைக்கானலில் ரம்மிய மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி


கொடைக்கானலில் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை சீசனையொட்டி, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கோடை விழாவையொட்டி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.

கொடைக்கானலில் பகல் நேரங்களில் மிதமான வெயிலும், மாலை நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது.

சனிக்கிழமை காலை முதலே மேக மூட்டம் காணப்பட்டது. பிற்பகலில் சிறிது நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. மழையில் நனைந்தவாறே குளுமையை பயணிகள் அனுபவித்தனர்.

கொடைக்கானல் ஏரிச் சாலை, பிரையண்ட் பூங்கா பகுதிகளில் அதிகமான பயணிகள் காணப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக