Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

டி.டி., மருத்துவ கல்லூரி மாணவர்களை அரசுக் கல்லூரியில் சேர்க்க முடியாது

"டி.டி., மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் பெறவில்லை" என, மருத்துவத் துறை கூறியுள்ளது.

இதுகுறித்து, மருத்துவத் துறை துணை இயக்குனர், முடிசூட பெருமாள் கூறியதாவது: சர்ச்சைக்குரிய டி.டி., மருத்துவக் கல்லூரியில், 2010 - 11ல் சேர்க்கப்பட்ட மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் போதிய மதிப்பெண் பெறவில்லை. மருத்துவக் கல்வியில் சேர 60 சதவீத மதிப்பெண் தேவை.

ஆனால், 2010 - 11ல் டி.டி., மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட 150 பேரில் 72 பேர் 50 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளனர். 48, 49, 49.5 என்ற சதவீதத்தில் தான் இவர்களது மதிப்பெண் உள்ளது. மீதமுள்ள 78 பேரின் மதிப்பெண், அரசு மருத்துவக் கல்லூரி ரேங்க் பட்டியிலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், இவர்களை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள முடியாது. இவர்களை, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தால், இவர்களுக்கு மேல் மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்களுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.

எனவே, டி.டி., மருத்துவக் கல்லூரி மாணவர்கள், வேறு படிப்புகளை தேர்வு கொள்வதே, அவர்களது எதிர்காலத்துக்கு நல்லது. இவ்வாறு, முடிசூட பெருமாள் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக