Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

கோவை வேளாண் பல்கலை மாணவர்களின் கண்டுபிடிப்புகள் ருவாண்டா நாட்டில் அறிமுகம்

தமிழ்நாடு வேளாண் பல்கலை கண்டுபிடிப்பான தானிய சேமிப்பில் ஏற்படும் பூச்சிகளை அகற்றும் உபகரணங்கள் ருவாண்டா நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தானிய சேமிப்பின்போது ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், குழாய் மற்றும் கூம்பு வடிவ பொறி, பயறு வண்டுகளை பிடிக்கும் பொறி, கிண்ணவடிவ பொறி, பூச்சிகளை தானாகவே அகற்றும் கருவி, பூச்சிகளின் முட்டைகளை அகற்றும் பொறி என பலவகை கருவிகள் உள்ளன.

சமீபத்தில் ருவாண்டா நாட்டிலிருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலையின் பூச்சியியல் துறை பட்டமேற்படிப்பு முடித்த மாணவர் அதனேஸ் தானிய சேமிப்பில் ஏற்படும் பூச்சிகளை, உபகரணங்கள் மற்றும் பொறிகளை கொண்டு கட்டுப்படுத்த ஆய்வு மேற்கொண்டார். படித்து முடித்து சொந்த நாட்டுக்கு செல்லும்போது தமிழ்நாடு வேளாண் பல்கலை தானிய சேமிப்பில் ஏற்படும் பூச்சிகளை கண்டறிய உதவும் உபகரண பெட்டிகளை விலைக்கு வாங்கிச் சென்றார்.

ருவாண்டா நாட்டு அரசின் வேளாண் துறையில் பணிபுரியும் இவர், 25 விவசாயிகளுக்கு இக்கருவிகள் குறித்து பயிற்சியளித்தார்; அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளார். பல்கலை கண்டுபிடிப்புகள் தொடர்பான விவரங்களை அவர்களுக்கு அளித்து பூச்சிகளை பாதுகாக்க அதனேஸ் பயிற்சியளித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக