Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 23 செப்டம்பர், 2013

நரேந்திர மோடி திருச்சி வருகையையொட்டி முஸ்லிம்களை கொடுமை படுத்தப்படுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம் : தமிழக காவல்துறைக்கு பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் எச்சரிக்கை

சேலத்தில் செப்டம்பர் 22 மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்  பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் கூறியதாவது ,

இலங்கை வடக்கு மாகாண முதல்வருக்கு வாழ்த்து
இலங்கையில் தேர்தல் நடைபெற்று வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று சி.வி. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

அவருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடை பெற்று அங்கு ஒரு மக்களாட்சி அமைக்கப் பட்டுள்ளதை போல் இலங்கையின் வடக்கு மாகாணத்திலும் ஜனநாயக ஆட்சி அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி.

ராஜீவ்காந்தி-ஜெயவர்த் தனா ஒப்பந்தத்தின் அடிப்படை யில் உறுதியாக இருந்து இத்தேர்தல் நடத்தப்பட்டுள் ளது. ஒன்று மட்டும் நிச்சயம் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடப்பதுதான் இலங்கைக்கு நல்லது. 13ஏ திருத்த சட்டத்தின்படி நடந்தால்தான் இலங்கைக்கு விடிவு காலம் இதை அதிபர் ராஜபக்சே உணர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மோடி வருகை: முஸ்லிம்கள் மீது அடக்குமுறை
நரேந்திர மோடி வரும் 26ம் தேதி திருச்சி வருகிறார். அவரது வருகையையொட்டி பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தைச்சுற்றியுள்ள வட்டாரங்களிலுள்ள முஸ்லிம் களை போலீசார் அச்சுறுத்தி கொடுமைப்படுத்தி வருகிறார் கள்.

தமிழ்நாட்டில் காவல் துறையினரின் இந்த நடவடிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் களை தனிமைப்படுத்தி அச் சுறுத்துவது என்பது ஜனநாயக நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை தமிழக முதல்வரின் கவனத் திற்கு கொண்டு வருகிறோம்.

திருச்சியில் முஸ்லிம் வீடுகளில் சோதனை யிடுவதும், விவரங்களை சேகரிப்பதும் ஜனநாயக நாட்டில் கேள்வி படாத விஷயங்கள்.

ஏழைகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவும் உள்ள முஸ்லிம்களை ஒரு பொது கூட்டத்தின் பெயரால் வரம்பு மீறி காவல்துறை நசுக்குகிறது என்றால் அதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதை நாட்டு மக்களுக்கு கொண்டு செல்வோம்.

ஐதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் கூட நிரபராதிகளான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு 7,8 ஆண்டுகள் சிறையில் அடைக் கப்பட்டு உண்மை யான குற்றவாளிகள் கைது செய்யப் பட்டதற்குப்பின் முஸ்லிம் இளைஞர்கள் அப்பாவிகள் என விடுவிக்கப்பட்டனர். அவர் களுக்கு ஆந்திர அரசு நஷ்ட ஈடு அறிவித்தது.

இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றார்கள். இப்படி நஷ்ட ஈடு வழங்கியது செல்லாது என அறிவித்த நீதிமன்றம் அந்த தீர்ப்பை திரும்பப் பெற்றுக் கொண்டது. இது எந்த தமிழ் பத்திரிகை யிலும் வரவில்லை. தி ஹிந்து ஆங்கில நாளேடு மட்டுமே இது பற்றி தலையங்கம் எழுதியது. அதை மணிச் சுடரில் நாங்கள் வெளியிட்டி ருந்தோம்.

தமிழ்நாட்டில் இப்படி நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டதில்லை. அது வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

முஸ்லிம்களின் தியாகம்
இந்த நாட்டிற்காக முஸ்லிம் கள் எவ்வளவோ தியாகங்கள் செய்திருக்கிறார்கள். தேச எல்லையை காப்பாற்ற லட்சக் கணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளார் கள். சுதந்திரத்திற்காக உடல், பொருள் தியாகம் செய்த முஸ்லிம்கள் கணக்கில் அடங்காது.

ஆனாலும் எங்களை ஏன் பகைமை உணர்வோடு பார்க்கிறார்கள். குஜராத்தில் கலவரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிரிழந்தார்கள். ஆனால் இறந்த முஸ்லிம் களை காரில் அடிப்பட்ட நாய் குட்டியோடுதான் ஒப்பிட்டார் நரேந்திர மோடி.

அப்படிப்பட்ட ஒருவர் நாட்டில் பிரதரானால் நாடு என்ன ஆவது. ஒரு கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பொது கூட்டம் ஒன்றில் பேச வரும்போதே முஸ்லிம்களுக்கு இவ்வளவு பெரிய சோதனை கள் என்றால் தப்பித் தவறி இவர் பிரதமராகி விட்டால் எவ்வளவு பெரிய கொடுமை கள் நடக்கும் என்பதை நாட்டு மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

65 ஆண்டுகளில் 13 ஆயிரம் வகுப்பு கலவரங்கள்
நாடு விடுதலையடைந்த இந்த 65 ஆண்டு காலத்தில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட வகுப்பு கலவரங்கள் நடை பெற்றுள்ளன. பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர். அவர் களின் பலநூறு கோடி ரூபாய் சொத்துக்கள் சூரையாடப் பட்டுள்ளன.

இதை எந்த ஒரு முஸ்லிமும் ஐ.நா. சபைக்கு எடுத்து செல்லவில்லை. உலகில் 57 முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன. கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களுக்கு உதவுங்கள் என்று நாங்கள் கோரிக்கை மனு தூக்கி அலையவில்லை.

இந்தியாவில் சீக்கியர் களுக்கு எதிராக இந்திரா காந்தி கொல்லப்பட்ட சமயத் தில் ஒரே ஒரு கலவரம்தான் நடந்தது. அதை சர்வதேச நீதிமன்றத்திற்கு சீக்கியர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

திருமதி சோனியா காந்தி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போது அவரிடத்தில் இதற்கான சம்மனை கொடுப் பதற்கு முயற்சித்திருக் கிறார்கள்.

சீக்கிய சமூகத்தை சேர்ந்த மன்மோகன்சிங் 2 முறை பிரதமராக்கப்பட்டு சீக்கியர் களுக்கு எதிரான கலவரத் திற்கு மன்னிப்பு கேட்டதற்கு பின்பும் சீக்கியர்கள் விடுவ தாக இல்லை.

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா. சபைக்கு எடுத்து சென்றார்கள். இந்திய முஸ்லிம்கள் இப்படியெல்லாம் எதாவது செய்தார்களா? அப்படி இருந்தும் ஏன் முஸ்லிம்கள் மீது மட்டும் துவேஷம் கொள்கிறார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதை தானே நாங்கள் வலியுறுத்துகிறோம். இதைத் தவிர இந்திய முஸ்லிம்கள் என்ன பாவத்தை செய்து விட்டார்கள்?

இவ்வாறு தலைவர் பேராசிரியர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக