Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 23 செப்டம்பர், 2013

தமிழக அரசின் அரசாணைப்படி 1அ படிவம் அடிப்படையில் இஸ்லாமிய திருமணங்களை பதிய மறுக்கும் சார்பதிவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை : பேராசிரியர் கே.எம்.கே. எச்சரிக்கை

தமிழக அரசின் அர சாணைப்படி 1A படிவம் அடிப்படையில் இஸ்லாமிய திருமணங்களை பதிய மறுக்கும் சார்பதிவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்படும் என பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர் களிடம் அவர் தெரிவித்ததாவது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதன் நோக்கம் ஷரீஅத் சட்டத்தை முஸ்லிம்களும் விளங்கி மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும் என்பதுதான். அஇஅதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. திருமதி பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள பொது நல வழக்கால் எங்களுக்கு இந்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

திருமணங்கள் செய்து வைப்பதற்கும், குடும்ப விவ காரங்களை பேசி தீர்ப்பதற் கும், மணமுறிவு சான்றிதழை வழங்குவதற்கும், காஜி களுக்கு உரிமை இல்லை என்று பதர் சயீத் தமது வழக்கில் குறிப்பிட்டுள் ளார்.

பள்ளிவாசலை மையமாக கொண்டு மஹல்லா ஜமாஅத் இயங்குகிறது. அந்த பகுதியில் வாழக்கூடிய முஸ்லிம்கள் அனைவரும் இந்த மஹல்லா ஜமாஅத்திற்கு கட்டுப்பட்ட வர்கள்.

இந்த ஜமாஅத்துக்குட்பட்ட பள்ளிவாசலின் இமாம் அந்த மஹல்லாவின் காஜி ஆவார். 1880ம் ஆண்டு காஜி சட்டப்படி இவரது பதவி நாயிப் காஜி என்று அழைக்கப்படும்.

இஸ்லாமிய திருமணங்கள் பரம்பரை பரம்பரையாக பள்ளி வாசல் இமாம்களை கொண்டு நடத்தப்பட்டு பள்ளிவாசல் திருமண பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன.

இஸ்லாமிய திருமண சட்டம் என்பது உலகம் முழுவதும் ஒரே சட்டம்தான். இந்தத் திருமண சட்டம் செல்லாது என்று சொல்லு வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

கஸ்டமரிலா என்று சொல்லக்கூடிய வழக்கப்படி யான நடைமுறை சட்டங்களை நீதிமன்றங்களை தவறு என்று சொல்லுவதில்லை. குடும்ப விவகாரங்களை நீதிமன்றத்தில்தான் தீர்க்க முடியும் என்றால் அது இந்த ஜென்மத்தில் முடியாது. உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே இன்றுள்ள வழக்குகளை தீர்ப்பதற்கு 400 வருடங்கள் ஆகும் என்று சொல்லியுள் ளார்.

காஜிகள் அவசரப்பட்டோ, ஒரு தலை பட்சமாகவோ குடும்ப விவகாரங்களில் ஒரு போதும் தீர்ப்பு அளிக்க மாட்டார்கள்.

சில முஸ்லிம் ஆண்கள் தவறு செய்கிறார்கள் என்பதற் காக இஸ்லாமிய சட்டத்தையே குறை சொல்ல முடியாது.

அது 1500 ஆண்டு கால மாக நடைமுறையில் உள்ள சட்டம் இறைவன் புறத்திலி ருந்து வந்த அந்த சட்டத்தை மனிதர்களால் மாற்ற முடியாது. இதுதான் முஸ்லிம்களின் நிலைபாடு.

திருமண கட்டாய பதிவு சட்டம்
உச்சநீதிமன்ற வழி காட்டுதலின் அடிப்படையில் திருமண கட்டாய பதிவு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.

நாங்கள் அன்றுள்ள திமுக அரசோடு நேரில் தொடர்பு கொண்டு உரிய விளக்கங் களை அளித்ததன் பலனாக முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்வதற்கு 1-ஏ என்ற தனிப் படிவம் உருவாக்கப் பட்டது.

இந்த 1-ஏ படிவத்தின் அடிப் படையில் அமைந்துள்ள பள்ளிவாசல் திருமண பதி வேட்டின் நகலை அப்படியே ஏற்றுக்கொண்டு சார்பதி வாளர்கள் முஸ்லிம் திரு மணங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய ஆட்சியில் பல சார்பதி வாளர்கள் இப்படி திருமணங் களை பதிவு செய்யமால் மணமக்கள், சாட்சிகள், திருமணம் நடத்தி வைத்தவர் வரவேண்டும் என்று நிர்பந் திருப்பது அரசு ஆணைக்கு விரோதமானது.

இன்னும் பல இடங்களில் முஸ்லிம் திருமணங்களை சிறப்பு விவாக சட்டப்படி (ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட்)த் தான் பதிவு செய்ய முடியும் என்று சொல்கிறார்களாம்.

இந்த சட்டப்படி திருமணம் செய்வதற்கு கணவன் மனைவி இருவருக்கும் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

முஸ்லிம்களை பொருத்த வரையில் தந்தை, தாயுடன் உடன் பிறந்தவர்களின் மக்களை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் விஷேச விவாக சட்டத்தில் அப்படி செய்ய இயலாது.

திருமணங்களை சார்பதி வாளர் அலுவங்களில்தான் நடத்த வேண்டும் என்பது இஸ்லாத்திற்கு உடன்பாடாக இருக்காது ஏனெனில் எங்களை பொருத்தவரை அக்கா மகளை திருமணம் செய்ய முடியாது.

சார்பதிவாளர் அலுவலங் களில் அப்படி திருமணம் நடந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பது.

எனவேதான் இஸ்லாமிய திருமண விவகாரங்களில் நாங்கள் இவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.

அக். 5 பொதுக்குழுவில் நடவடிக்கை
வரும் அக்டோபர் 05ம் தேதி காலை சென்னை பெரியார் திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இப்பொதுக்குழுவில் நாங்கள் கலந்து பேசி 1-ஏ படிவத்தின் அடிப்படையில் திருமணங்களை பதிவு செய்ய மறுக்கின்ற சார்பதிவாளர்கள் யார்? யார்? அவர்கள் மீது சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை அறிவிக்க உள் ளோம்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக