சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதிகள் தற்போது
பார்களாக மாறி வருகின்றன.சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே, ‘டாஸ்மாக்’ கடைகள் உள்ளன. அவற்றில், ‘பார்’ வசதிகள் இருந்தாலும், பெரும்பாலான ‘குடிமகன்’கள், சாலையோரத்தையே ‘பார்’களாக மாற்றி விடுகின்றனர்.
மதுபாட்டில்களை வாங்கி வந்து,சாலையிலேயே நின்று, ‘கட்டிங்’
பிரிப்பதும், அங்கேயே வைத்து குடிக்கும் செயல்களும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. ரயில் நிலையம் செல்வோர்,குறிப்பாக பெண்கள், இதனால்
பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, காலியான மது பாட்டில்களை போதையில் கண்டபடி வீசி உடைப்பதாலும், சாலையோரம் செல்வோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போதையேறிய சில ‘குடிமகன்’கள், பெண்களை கேலி, கிண்டல் செய்யும் செயல்களும் நடக்கின்றன. போலீசாரும் இதை கண்டும், காணாமல் இருந்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில், தொடரும் அவர்கள்
அட்டகாசத்தை போலீசார் வேடிக்கை பார்க்காமல், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பார்களாக மாறி வருகின்றன.சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே, ‘டாஸ்மாக்’ கடைகள் உள்ளன. அவற்றில், ‘பார்’ வசதிகள் இருந்தாலும், பெரும்பாலான ‘குடிமகன்’கள், சாலையோரத்தையே ‘பார்’களாக மாற்றி விடுகின்றனர்.
மதுபாட்டில்களை வாங்கி வந்து,சாலையிலேயே நின்று, ‘கட்டிங்’
பிரிப்பதும், அங்கேயே வைத்து குடிக்கும் செயல்களும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. ரயில் நிலையம் செல்வோர்,குறிப்பாக பெண்கள், இதனால்
பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, காலியான மது பாட்டில்களை போதையில் கண்டபடி வீசி உடைப்பதாலும், சாலையோரம் செல்வோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போதையேறிய சில ‘குடிமகன்’கள், பெண்களை கேலி, கிண்டல் செய்யும் செயல்களும் நடக்கின்றன. போலீசாரும் இதை கண்டும், காணாமல் இருந்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில், தொடரும் அவர்கள்
அட்டகாசத்தை போலீசார் வேடிக்கை பார்க்காமல், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக