Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

போதை ஆசா­மி­களால் பெண்கள் அவதி

சென்னை மயி­லாப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பகு­திகள் தற்­போது
பார்­க­ளாக மாறி வரு­கின்­றன.சென்னை மயி­லாப்பூர் ரயில் நிலையம் அருகே, ‘டாஸ்மாக்’ கடைகள் உள்­ளன. அவற்றில், ‘பார்’ வச­திகள் இருந்­தாலும், பெரும்­பா­லான ‘குடி­ம­கன்’கள், சாலை­யோ­ரத்­தையே ‘பார்’­க­ளாக மாற்றி விடுகின்­றனர்.


மது­பாட்­டில்­களை வாங்கி வந்து,சாலை­யி­லேயே நின்று, ‘கட்டிங்’
பிரிப்­பதும், அங்­கேயே வைத்து குடிக்கும் செயல்­களும் அன்­றாட நிகழ்­வு­க­ளா­கி­விட்டன. ரயில் நிலையம் செல்வோர்,குறிப்­பாக பெண்கள், இதனால்
பாதிக்­கப்­படும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது.


இது­த­விர, காலி­யான மது பாட்­டில்­களை போதையில் கண்­ட­படி வீசி உடைப்­பதாலும், சாலை­யோரம் செல்வோர் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். போதை­யே­றிய சில ‘குடி­ம­கன்’கள், பெண்­களை கேலி, கிண்டல் செய்யும் செயல்­களும் நடக்­கின்­றன. போலீ­சாரும் இதை கண்டும், காணாமல் இருந்து வரு­கின்­றனர்.


பொது­மக்­க­ளுக்கு தொல்லை தரும் வகையில், தொடரும் அவர்கள்
அட்­ட­கா­சத்தை போலீசார் வேடிக்கை பார்க்­காமல், கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என, பகு­தி­வா­சிகள்
வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக