Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 23 அக்டோபர், 2012

நெல்லை மாவட்டத்தில் சேதமடைந்த பஸ்கள் இயக்கம் பயணிகளுக்கு ஆபத்து


நெல்லை யில் அரசு மற்றும் தனியார் மூலம் இயக்கப்படும் பஸ் கள் ஓட்டை உடைசலாக காணப்படுகின்றன. இத னால் பயணிகளின் உயி ருக்கு பாதுகாப்பற்ற சூழ் நிலை நிலவுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 கோட்டங்கள் உள்ளன. இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான பஸ்கள் பல் வேறு பகுதிகளுக்கு இயக் கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் பராமரிப்பு இல்லாமல் பழு தடைந்த நிலையில் உள் ளன. இதனால் பொதுமக் கள் தினமும் அவஸ்தை பயணத்தை அனுபவித்து வருகின்றனர்.

பொதுவாக புதிதாக இயக்கப்படும் ஒரு பஸ் அதிகபட்சம் 5 லட்சம் கிமீ தூரம் மட்டுமே இயக்கப்பட வேண்டும். பின்னர் அந்த பஸ்சின் இன்ஜினை மறு சீரமைப்பு செய்து அதில் தேய்மானம் அடைந்த உதிரி பாகங்களை மாற்ற வேண்டும். ஆனால் நெல்லை கோட்டத்தில் அதிகமான பஸ்கள் 12 லட்சம் கி.மீ. தாண்டியும் கிராமபுறங்களுக்கு இயக்கப் பட்டு வருகின்றன. இதில் மேலப்பாளையம், கோபா லசமுத்திரம், மேலச்செவல் போன்ற பகுதிகளுக்கும் பழைய பஸ்கள் இயக்கப்ப டுகின்றன.
இதற்கு காரணம் 1997ம் ஆண்டுக்கு பிறகு போக்குவ ரத்து கழகத்தில் தொழில் நுட்ப பணியாளர்கள் பற் றாக்குறை ஆகும். இதனால் பஸ்கள் பராமரிப்பு பணி மோசமானது. இந்நிலையில் நெல்லை கோட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 263 புதிய பஸ்கள் தற்போது பல பகுதிகளில் இயக்கப் பட்டு வருகின்றன. ஆனால் கிராமப்புறங்களுக்கு பழைய பஸ்கள் இயக்கப்படு வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதேபோல் நெல்லை மாநகர பகுதியில் இயக்கப்ப டும் தனியார் பஸ்கள் பல ஓட்டை உடைசலாக உள் ளன. இந்த பஸ்கள் வருமா னத்தை மட்டுமே குறிக்கோ ளாக கொண்டு இயக்கப்படு கின்றன. படிக்கட்டுகள் உடைந்தும், பஸ்சின் பின் பக்க கண்ணாடி இல்லாம லும் பஸ்களை இயக்கும் நிலை நீடித்து வருகிறது. மினி பஸ்கள் பல பராமரிப் பின்றி பொதுமக்களையும், இரு சக்கர வாகன ஓட்டிக ளையும் மிரட்டும் வகையில் இயக்கப்படுகின்றன.
சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அள வுக்கு அதிகமாக பொருட் களை ஏற்றிச்சென்றால் போக்குவரத்து போலீசார் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். ஆனால் படிவரை பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களை அவர்கள் கண்டுகொள்வ தில்லை. தற்போது வண் ணார்பேட்டை வணிக நிறு வனங்களின் கூடாரமாக மாறிவருகிறது. இதனால் பயணிகளை ஏற்றி இறக்க அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் முண்டியடித்து செல்லும் நிலை தொடர்கிறது.

இதனை தவிர்க்க போக் குவரத்து போலீசார் கண் காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து போக்குவ ரத்து விதிகளை மீறி இயக் கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக நல ஆர்வலர் கள் தெரிவித்துள்ளனர்.

வேலைக்காக மும்பைக்கு அழைத்து செல்லப்பட்ட 17 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

கடலூர் மாவட்டத்திலிருந்து வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட 17 பழங்குடி இன சிறுவர், சிறுமியர்கள் மும்பையில் மீட்கப்பட்டனர்.பழங்குடி இருளர் மக்கள் கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மரியநாதன், சின்னத்தம்பி, கோவிந்தன், ராஜா ஆகியோர் கடலூர் சங்கொலிக்குப்பம் பகுதியில் இருளர் மக்களிடம் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.மும்பையில் கவரிங் நகை செய்யும் வேலை. பிள்ளைகளை அனுப்புங்கள். மாத சம்பளம் 4,500 உங்கள் பெயருக்கு அனுப்பி விடுகிறோம். முன் பணமாக 5 ஆயிரம் தருகிறோம் என்றனர். ஆசை வார்த்தையை நம்பிய இருளர் மக்கள் தங்கள் 17 பிள்ளைகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மும்பைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மும்பை மலாடு என்ற பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கவரிங் நகைகள் செய்யும் வேலையில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 3 மாதங்கள் கழிந்த நிலையில் சம்பளம் வரவில் லை, பிள்ளைகளுடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில் டி.எஸ்.பேட்டையை சேர்ந்த கண்ணப்பன், சுப்பிரமணியம், ஆகியோருக்கு மும்பை ஏஜன்டுகள் போன் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் பிள்ளைகளை காணவில்லை எனக்கூறி தொடர்பை துண்டித்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து சர்ப்பம் இருளர் தொழிலாளர் சங்கம் மூலம் கடந்த 17ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவை சந்தித்து குழந்தைகளை மீட்டு தருமாறு மனு அளித்தனர். குழந்தைகளை மீட்க வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டது. அப்போது மும்பையில் காணவில்லை எனக்கூறப்பட்ட 3 சிறுவர்களும் டி.எஸ்.பேட்டைக்கு வந்தனர். அவர்களிடமிருந்து போன் நம்பர்களை பெற்ற தனிக்குழுவினர் மும்பையில் சிறுவர்கள் வேலை செய்து வந்த கம்பெனிகளை தொடர்பு கொண்டனர். உடனே அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள். இல்லை என்றால் சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்த 14 சிறுவர், சிறுமிகள் கடந்த 20ம் தேதி ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் அனைவரும் 21ம் தேதி வேலூர் காட்பாடி வந்து அங்கிருந்து நேற்று காலை கடலூர் வந்து சேர்ந்தனர்.

சுற்றுச்சூழலியல் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்


இயற்கை சமநிலையை பாதுகாக்க, உலக நாடுகள் சுற்றுச்சூழலை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சுற்றுச்சூழல் பற்றிய படிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது படிப்பாக மட்டும் பார்க்கப்படாமல் சமூக சேவையாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் சுற்றுச்சூழலில் உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் இத்துறையில் பணிபுரிய விரும்புகின்றனர். சுற்றுச்சூழலியல் துறையில் இளநிலை, முதுநிலை மற்றம் டிப்ளமோ பாடப்பிரிவுகள் உள்ளன.

தகுதிகள்:
சுற்றுச்சூழல் பட்டப்படிப்புகளில் சேர விரும்புவோர், பிளஸ் 2வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை முதன்மை பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். அறிவியல் அறிவு, ஆராய்ச்சியில் ஆர்வம் மற்றும் தகவல் தொடர்பு திறன் இத்துறைக்கு இன்றியமையாதவை.

சுற்றுச்சூழலியல் பட்டப்படிப்புகள்:
* பி.எஸ்சி., சுற்றுச்சூழலியல் அறிவியல்
* எம்.எஸ்சி., சுற்றுச்சூழலியல் அறிவியல்
* பி.இ., சுற்றுச்சூழல் இன்ஜினியரிங்
* எம்.டெக்., சுற்றுச்சூழல்

இன்ஜினியரிங்:
* எம்.டெக்., சுற்றுச்சூழலியல் அறிவியல் மற்றும் இன்ஜினியரிங்
* எம்.டெக்., எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை
* டிப்ளமோ - சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலியல் அறிவியல் போன்ற படிப்புகள் இந்த துறையில் காணப்படுகின்றன.


கல்வி நிறுவனங்கள்:
இந்தியாவில் சுற்றுச்சூழலியல் கல்வி நிறுவனங்கள்.
* விவசாய பல்கலைக்கழகம், கோவை
* ‘ஸ்கூல் ஆப் என்விரான்மென்டல் சயின்ஸ்’, டில்லி
* எஸ்.என்.டி.டி., பெண்கள் பல்கலைக்கழகம், மும்பை
* டில்லி பல்கலைக்கழகம், டில்லி
* பி.இ.எஸ்., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், மாண்டியா
* எல்.டி., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், ஆமதாபாத்

வேலைவாய்ப்புகள்:

சுற்றுச்சூழலியல், ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நிறுவனங்களில் இத்துறையினருக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுற்றுச்சூழலியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. சுகாதார அமைப்புகள், இயற்கை சார்ந்த சமூக அமைப்புகள் போன்றவற்றிலும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

தகவல் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் சிறப்பான வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த துறையில் தனியார் நிறுவனங்களில் துவக்கத்தில் 10 ஆயிரம் ரூபாய் முதல் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழலியல் துறையில் பணிபுரிபவர்களுக்கு இயற்கையை காப்பாற்றும் மற்றும் சமூக சேவையில் ஈடுபடும் மனநிறைவு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

திங்கள், 22 அக்டோபர், 2012

ஜெம்மாலஜி (Gemology) துறை வேலை வாய்ப்புகள்


ரத்தினக் கற்கள், வைரங்கள், தங்க நகைத்தயாரிப்பு மற்றும் நகை வடிவமைப்பு போன்ற துறைகளை தொழில்நுட்ப ரீதியாக படிப்பது "ஜெம் மாலஜி'.
இன்றைய நிலையில் தொ ழில் நுட்பம் நன்கு வளர்ந் துள்ளதால், கணினி அடிப்படையிலான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
விலையுயர்ந்த கற்களின் அமைப்பு மற்றும் பண மதிப்பு அடிப்படையில், அவற்றை அடையாளப்படுத்தி, தரப் படுத்தி மற்றும் வகைப் படுத்துவது ஒரு ஜெம்மால ஜிஸ்டின் பணியாகும். மேலும் அவை சேதமாகாமல் தடுக்கும் வழிகளையும் அவர்கள் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். விலையுயர்ந்த கற்கள்(ஜெம்ஸ்) மற்றும் தங்க நகை தொழி லானது, இந்தியாவில் அதிக பணம் புரளும் தொழில்களில் ஒன்றாகும். இந்தியாவின் வைரத் தொழில்துறையானது, உலகளவில் புகழ்பெற்ற ஒன்று.
மதிப்புத் தரக்கூடியதாகவும், ஏற்றுமதிப் பொருளாகவும், அழகுப் பொருளாகவும் இருப் பதால் வைரங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. நமது குணாதிசயத்திலும், அதிர்ஷ்டத்திலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பொரு ளாக விலையுயர்ந்த கற்கள் இன்றைய நிலையில் மதிக்கப் படுகின்றன.
மேலும், தங்கம் மற்றும் வைரங்கள் சேர்க்கப்பட்டு, புதிய புதிய டிசைன்கள் அவ்வப்போது அறிமுகப் படுத்தப்படுவதால், இத்துறை யில் நிபுணர் களுக்கான தேவை என்றும் உண்டு.
தேவைப்படும் பண்புகள்: சிறந்த கிரகிக்கும் திறன், கற்பனை மற்றும் படைப் பாக்கத் திறன், வண்ணப் பொருத்தம் பற்றிய அறிவு, அழகுணர்ச்சி, பாரம்பரிய வடிவமைப்புகளைப் பற்றிய அறிவு, கடின உழைப்புடன் சிறந்த தகவல்தொடர்புத் திறன் போன்றவை அவசியம். இவற் றுடன் மக்களின் ரசனைகள் மற்றும் மாறும் சூழலைக் கருத்தில்கொண்டு செயல்படு பவர்களுக்கு உகந்த துறை இது.
ஒருவர் இத்துறையில் வடிவமைப்பாளர், மேலாளர், உற்பத்தியாளர், ஆராய்ச்சியா ளர், தொழில்நுட்ப மதிப்பீட் டாளர் அல்லது இத்துறை சார்ந்த கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் போன்ற பலவிதப் பணிகளில், தனக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்யலாம். ஒரு மாதம் சான்றிதழ் படிப்பு முதல் டிப்ளமோ, ஓர் ஆண்டு அட்வான்ஸ்ட் படிப்பு என பல்வேறு நிலைகளில் துறை சார்ந்த படிப்புகள் உள்ளன.

கல்வி நிறுவனங்கள்:

Arch Academy of Design, Jaipur
Delhi Gems and Jewellery Institute, New Delhi
Gemcraft Jewellery Institute, New Delhi
Gemmological Institute of India, Mumbai
Indian Institute of Gemmolgy, New Delhi
Indian Institute of Gems and Jewellery, New Delhi
Indian Institute of Jewellery, Mumbai
National Institute of Jewellery Design & Technology, New Delhi
St. Xavier's College, Mumbai
Shingar Institute & Kolkatta.

பரந்து விரிந்த வேதியல்துறையும் அதன் வேலைவாய்ப்புகளும் !


அறிவியலின் ஒரு துறையான வேதியியல், உயிர்பொருள் சார்பில்லாதது (Inorganic), உயிர்பொருள் சார்ந்தது (organic) மற்றும் பவுதீகம் தொடர்பானது (Physical) என்று 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. சமீபகாலங்களில் இத்துறையில் நவீன வளர்ச்சி ஏற்பட்டு, பயோகெமிஸ்ட்ரி(உயிர் பொருட்களிலுள்ள அடிப்படை கூறுகளை ஆராய்தல்), நியூரோகெமிஸ்ட்ரி(நரம்பியல் அமைப்பின் ரசாயனம் செயல்பாடு பற்றி ஆராய்தல்) போன்ற துறைகள் உருவாகியுள்ளன.
ரசாயன தொழில்நுட்பம்: தொழில்நுட்பம் என்பது பொறியியலின் பயன்பாடு. பல்வேறு துறைகள் மற்றும் தொழிற்சாலைகளில், செயல்பாடுகள், நடைமுறைகள், உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை மேம்படுத்தவும், கட்டுப்படுத்தவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. ரசாயன ஆய்வாளர்கள் பொதுவில் ரசாயன தொழில்நுட்ப நிபுணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அதேசமயம், ஆல்கஹால் தொழில்நுட்ப நிபுணர், செராமிக் தொழில்நுட்ப நிபுணர், பைபர் தொழில்நுட்ப நிபுணர், சணல் தொழில்நுட்ப நிபுணர், உணவு தொழில்நுட்ப நிபுணர், எரிபொருள் தொழில்நுட்ப நிபுணர், கண்ணாடி தொழில்நுட்ப நிபுணர், லெதர் தொழில்நுட்ப நிபுணர், மர தொழில்நுட்ப நிபுணர் என்று துறைவாரியாகவும் அழைக்கப்படுகிறார்கள்.
ரசாயன பொறியியல் என்பதிலிருந்து, ரசாயன தொழில்நுட்பம் என்பது அதிகம் மாறுபட்ட ஒன்றாகும். தொழில்நுட்பம் என்பது, மேம்பாடு மற்றும் உற்பத்தி நோக்கத்திற்கான செயல்பாட்டு இயக்கம் தொடர்பானதாகும். பொறியியல் என்பது வடிவமைப்பு, கட்டுமானம், நிறுவுதல் மற்றும் பிளான்டுகளின் இயக்கம் மற்றும் ரசாயன பொருட்களை தயாரிப்பதற்கான உபகரணங்கள் தொடர்பானது.

பணியின் தன்மை: பெரியளவிலான ரசாயனம் மற்றும் தொழில்துறை தயாரிப்புகளுக்கான செயல்முறைகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துவது ரசாயன தொழில்நுட்ப நிபுணரின் பணி. கச்சாப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பரிந்துரைக்கப்பட்ட வகையில் வாங்கப்பட்டுள்ளதா மற்றும் தயாரிப்பு பணிகள் முறையாக கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது இவரின் முக்கியப் பணி. குறைந்த விலையில் பொருட்கள் வாங்குவதை மேற்பார்வையிடுவதும் இவரின் பணி. இதைத்தவிர, புதிய கச்சாப் பொருட்களை கண்டுபிடித்தல், இறக்குமதி செய்யப்படும் கச்சாப் பொருட்களுக்கு மாற்றாக உள்ளூரிலேயே புதிய கச்சாப் பொருளை கண்டுபிடித்தல், கச்சாப் பொருட்கள் மற்றும் முடிவுப் பொருட்களின் தரத்தை மதிப்பீடு செய்தல் போன்றவையும் முக்கிய பணிகள்.
ஒரு தொழில்நுட்ப நிபுணரின் பணியானது, ஆராய்ச்சி-உற்பத்தி-நிர்வாகம் என்று பரந்த அளவில் வியாபித்துள்ளது. தயாரிப்பு, ஆராய்ச்சி, மேம்பாடு, விற்பனை, தொழிலாளர் நலம் ஆகிய பல துறைகளையும் கவனிப்பதால், முழு நிறுவன செயல்பாட்டிற்கும் அவர் பொறுப்பாகிறார்.
மேலும், இவரது பணியில், ஜூனியர் தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சி பணியாளர்கள், இயக்குபவர்கள், மெக்கானிக்குகள் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் ஆகியோர் துணையாக இருக்கிறார்கள். ஒரு நிறுவனத்திற்குள்ளேயே பலவிதங்களில் வேதியியல் தொழில்நுட்ப வல்லுனர் பணியாற்றுகிறார். வெளியே செல்லும் பணி இவருக்கு இல்லை. தூசு படிந்த, அழுக்கான, சூடான, பொருட்கள் அடைத்து வைக்கப்பட்ட, நாற்றமடிக்கும், ஈரமான என்பது போன்ற பலவித அசவுகரிய சூழல்களிலும் அவர் பணிபுரிய வேண்டியதிருக்கும். மேலும், ஆசிட், பலவித ரசாயனங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் அவர் கையாள வேண்டியிருக்கும்.

இப்பணிக்கான தகுதிகள்: ஒருவர் ரசாயன தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிய, பி.டெக்/பி.டெக்ஸ்ட்/பி.எஸ்சி(டெக்) ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் தொழில்நுட்பம் படித்திருக்க வேண்டும். இத்தகைய படிப்புகளில் சேர, பள்ளி மேல்நிலைப் படிப்பில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை படித்திருக்க வேண்டும். மேலும் இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது, மெரிட் அடிப்படையிலும், போட்டித் தேர்வுகளின் அடிப்படையிலும் நடைபெறுகிறது.
சில கல்வி நிறுவனங்கள்,(சில பாலிடெக்னிக்குகள் உட்பட), டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், செராமிக் தொழில்நுட்பம், இனாமல்(உலோகத்திற்கு அழகூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பளபளப்பான பொருள்) தொழில்நுட்பம், இன்ஸ்ட்ரூமென்ட் தொழில்நுட்பம், லெதர் தொழில்நுட்பம், லெட்டர் ப்ரெஸ் பிரின்டிங், பிரின்டிங் தொழில்நுட்பம் ஆகிய பலவித துறைகளில் 2 வருடங்கள் முதல் 4 வருடங்கள் வரையிலான படிப்புகளை வழங்குகின்றன. கான்பூரிலுள்ள நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட், 1 வருட சுகர் டெக்னாலஜி படிப்பை நடத்துகிறது. மேலும், முதுநிலை மற்றும் டிப்ளமோ நிலைகளில் உயர்தொழில்நுட்ப படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வேலை வாய்ப்புகள்: ரசாயன தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான வேலைவாய்ப்பை பல தொழில் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆசிட், ஆல்கலீஸ், உப்பு, கொழுப்பு, சோப்பு, எண்ணெய், காய்கறி எண்ணெய், களிமண், கண்ணாடி, மருந்துகள், பூச்சிக்கொல்லி, வெடிபொருட்கள், மெழுகு, பசை, எரிசாராயம், வர்ணங்கள், பூச்சுகள், சாயம், பெட்ரோலிய பொருட்கள், ரப்பர், ரேயான், பேப்பர் உள்ளிட்ட பல பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு உண்டு. அரசு மற்றும் பொதுத் துறைகளில் உள்ள பலவித ஆராய்ச்சி ஆய்வகங்களில் வேலைவாய்ப்பு உண்டு.
இத்துறையில், தயாரிப்பு மற்றும் நிர்வாகம் தொடர்பாகவே பலருக்கு பணிகள் கிடைத்தாலும், சிலருக்கு சந்தை ஆராய்ச்சி, பிளான்ட் வடிவமைப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சோதனை, கல்லூரி மற்றும் பல்கலை ஆசிரியப் பணி, விற்பனை மற்றும் சேவைப் பணி, டெக்னிக்கல் ரைட்டிங் மற்றும் ஜர்னலிசம் போன்ற துறைகளிலும் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

ரசாயன பொறியாளர்: ரசாயனங்கள், பெட்ரோலிய எரிபொருட்கள் மற்றும் அதுசார்ந்த பொருட்கள், பாலிமர்கள், சிமென்ட் மற்றும் சுண்ணாம்பு, தாதுக்கள் மற்றும் உலோகங்கள், பேப்பர்கள் மற்றும் பலகைகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றின் உற்பத்தி செயல்பாட்டை வடிவமைத்தல் மற்றும் இயக்கம் ஆகியவற்றுக்கு ரசாயன பொறியாளர் பொறுப்புடையவர். மேலும் இவர்கள், தண்ணீர் அல்லது கழிவுகளை கையாளுதல், சூழல் விதிமுறை போன்ற பிரிவுகளில் பணியாற்றலாம் அல்லது உலோகவியல் அறிஞராக பணியாற்றலாம்.
புதிய மற்றும் திறன்வாய்ந்த செயல்பாடு, உபகரணங்களை பாதுகாப்பாகவும், சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு நேராதவாறும் பயன்படுத்தல், தற்போது நடைமுறையில் இருக்கும் செயல்பாட்டை ஆய்வுசெய்து, அதை இன்னும் சிக்கனமாகவும், சிறப்பாகவும் எப்படி மாற்றலாம் என்பன உள்ளிட்ட பலதரப்பட்ட விஷயங்களிலும் ரசாயன பொறியாளர் பணியாற்றுவார்.

தேவைப்படும் பண்புகள்: அடையாளப்படுத்தும், பகுப்பாய்வு செய்யும், பிரச்னைகளை தீர்க்கும் மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் வேண்டும். மேலும் நல்ல படைப்பு திறனும், நடைமுறை தேவைகளை புரிந்து செயல்படும் திறனும், மேற்பார்வையாளர் இல்லாமல் பணியாற்றும் தன்மையும் இருக்க வேண்டும்.

அனலிடிகல் கெமிஸ்ட்: பாலில் உள்ள நச்சுத்தன்மை, ஸ்டீலில் உள்ள மாங்கனீஸ் அளவு, சாக்லேட் தயாரிக்க உதவும் கச்சாப் பொருட்களை சோதனையிடுதல், பெயின்ட் தயாரிக்க உதவும் கரிமத்தின் தூய்மையை சோதனை செய்வது போன்ற பல பணிகள் இவருக்கு உள்ளது.
இதற்கு தேவையான பண்புகள்: நல்ல தொழில்நுட்ப திறன், வேதியியல் பாடத்தில் தீவிர ஆர்வம், ஒருங்கிணைக்கும் திறன் போன்றவை சில முக்கிய தகுதிகளாகும்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

சேவையுடன் சம்பாதிக்க ஆகாயவியல் துறை (Aerospace)


பொறியியல் பாடங்களில் வித்தியாசமானதும் மாணவர்களுக்குப் புதிய பாதையைக் காட்டும் துறையுமான ஆகாயவியல் (Aerospace) பாடத்தை கன்னியாகுமாரி மாவட்டம் குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைகழகம் கற்றுத் தருகிறது. இது நான்காண்டு படிப்பாகும். 2009-ம் ஆண்டு இந்தத் துறை தொடங்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆகாயவியல் துறையின் உட்பிரிவுகளான விமானப் பகுதிகளை வடிவமைத்தல், பிரித்தல், பரிசோதித்தல்,, விண்வெளிக் கலன்களைக் கட்டுதல், ஏவுதல் மற்றும் விண்வெளி சார்ந்த பணிகளைத் தெரியப்படுத்தி, அதில் வல்லுநர்களாக்குவதே பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்கிறார் பல்கலை வேந்தர் ஏ.பி.மஜீத்கான். இத்துறையில் மிகவும் புகழ்பெற்ற பேராசிரியர்கள் பல்கலைகழக மாணவர்களுக்கு ஆகாயவியல் சார்ந்த அனைத்து உட்பிரிவுகளின் நுணுக்கங்களையும் தெளிவாகக் கற்றுக்கொடுக்கின்றனர்.

இங்கு அனைத்துப் புதிய தொழில்நுட்பங்களுடனும் கல்வி கற்றுத் தரப்படுகிறது. பயிற்சிக்குத் தேவையான நவீன உபகரணங்கள் அடங்கிய பரிசோதனைக் கூடம், மற்றும் புஷ்பக், செஸ்னா, லியர்ஜெட் ஆகிய விமானங்கள் மாணவர்களின் பயிற்சிக்காக வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் விமானத்தில் பறப்பது,பறத்தலைக் கட்டுப்படுத்துவது போன்றவையும் கற்றுத் தரப்படுகிறது.

இத்துறையிலிருந்து வெற்றிகரமாக வெளியேறும் பட்டதாரிகள் விமானக் கட்டுமானம், விமானம் ஓட்டுதல், வடிவமைத்தல், விமானப் போக்குவரத்து மேலாண்மை, பாதுகாப்பு, மற்றும் ஐ.எஸ்.ஆர்.ஓ. போன்ற பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புப் பெற்றிடப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

மேலும், எதிர்காலத்தில் உலக அரங்கில் இந்தியா தனித்திறமையுடன் விளங்க இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் பொருட்டு, தென் தமிழகத்தில் 8-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு பயிலுகின்ற மாணவர்களை நுழைவுப் பரீட்சை அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அவர்களில் 500 பேருக்கு ஆண்டுதோ

றும் 15 நாள்கள் அறிவியல் ஆய்வுக்கூடங்களில் பயிற்சியளிக்கிறது. அவர்களுக்கு இளம் விஞ்ஞானிகள் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இளம் தலைமுறையை ஊக்குவிக்கும் விதமாக இப்பல்கலைக்கழகம் இதைக் கடந்த 11 ஆண்டுகளாக செய்து வருகிறது.

சனி, 20 அக்டோபர், 2012

இளைய சமுதாயமே ! நம் வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம் !


                  தன் வரலாற்றை அறியாத சமுதாயம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.எனவே , சமுதாயம் ,சமுதாயம் என்று நாள் தோறும் சாலை மறியல் ,ஆர்ப்பாட்டம்  , மக்களிடம் வசூல் போன்றவற்றில் தீவிரமாக உள்ள நாம் ,நம் சமுதாயத் தலைவர்கள் நம் சமுதாயம் முன்னேற செய்த பணிகள் என்ன என்பதனை சிந்தித்து பார்க்க கடமை பட்டுள்ளோம் .

    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு ,தமிழகத்தை பொருத்தவரை முஸ்லிம் சமுதாயத்திற்கென்று இருந்த ஒரே கல்லூரி 1919 - ஆண்டு வாணியம்பாடியில் ஆரம்பிக்கப் பட்ட இஸ்லாமியக் கல்லூரி ஒன்று மட்டும் ஆகும் .

     இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு , அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை ,அதன் தனித்துவத்தை அகற்றுவதற்கு  அன்றைய ஆட்சியாளர்கள் முயற்சி செய்தபோதும் , சென்னையில் முஹம்மதன் கல்லூரியின் பெயரை மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சித்த போதும் கடுமையாக  எதிர்த்து போராடிய நம் சமுதாயத் தந்தை காயிதே மில்லத்தும் அவர் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சமுதாயத் தளபதிகளும் ,சமுதாயத்தின் நிலை குறித்தும் , தங்களுக்கென்று கல்வி நிலையங்கள் வேண்டும் என்று சிந்தித்து அதனை செயல் படுத்தியும் காட்டினார்கள் . அசைத்து பார்க்க நினைத்த ஆட்சியாளர்களை , அதிரவைத்தது  நம் சமுதாயத் தலைவர்களின் செயல்பாடுகள்.

     ஆம் ,ஆட்சியாளர்களின் செயல்பாடுகளையும் , கல்வியில் நம் சமுதாயத்தின் நிலையையும் ஆலோசித்து , நமக்கென்று நாமே கல்லூரிகளை உருவாக்க முடிவு செய்தார்கள் .

   முடிவு செய்த மாத்திரத்தில் , காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் , சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது , M .M.பீர் முஹம்மது சாஹிபு போன்ற நாவன்மை மிக்க  தன் போர்படை தளபதிகளை அழைத்துக் கொண்டு ,சிங்கப்பூர் , மலேசியா  , பர்மா போன்ற நாடுகளுக்குச் சென்று நம் சமுதாய பெரு மக்களை சந்தித்து , பள்ளிவாசல்கள் தோறும் சென்று சென்று இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின் கல்வி நிலை உயர வேண்டும் என்பதனை எடுத்துக்கூறி , மடிப்பிச்சை ஏந்தி வசூல் செய்யப்பட்ட 5 லட்சம் ரூபாயை கொண்டுவந்து , அன்று பணக்காரர்கள் கூடும் ஜாலி கிளப் இருந்த இன்றைய சென்னை ராயபேட்டையில் உள்ள 12 ஏக்கர் நிலத்தை வாங்கினார்கள் .

      அவ்வாறு வாங்கப் பட்ட இடத்தில்தான் 1951 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான்  இன்று சென்னையில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் "புதுக்கல்லூரி"ஆகும் .  அப்படி உருவாக்கிய அந்த கல்லூரியின் ,ஒவ்வொரு வளர்ச்சியிலும் காயிதே மில்லத் (ரஹ் ) கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் . அதனை தொடர்ந்து வந்த சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாகிபு அவர்கள் 14 ஆண்டுகள் அந்தக் கல்லூரியின் தலைவராக இருந்து அந்தக் கல்லூரியை படிப் படியாக உயரச் செய்தார்கள் .

     இன்றைக்கும் அந்தக் கல்லூரி இன்றைய சமுதாயத்தை பார்த்து கேள்வி எழுப்பிக் கொண்டுள்ளது , அதனை இன்றைய இளைய சமுதாயம் மறந்து விடுகின்றது . வீதி தோறும் உணர்ச்சிகளை தூண்டி , வசூல் செய்கின்றீர்களே, என்னை உருவாக்கி ,என்னை வளரச் செய்த தலைவர்கள் போன்று , உங்களால் ஒரு கல்வி நிலையத்தை உருவாக்க முடியவில்லையா ? என்று கேள்வி எழுப்பிக்  கொண்டுள்ளது .

இன்ஷாஅல்லாஹ் ,கேள்விகள் தொடரும்................