Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 20 அக்டோபர், 2012

இளைய சமுதாயமே ! நம் வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம் !


                  தன் வரலாற்றை அறியாத சமுதாயம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.எனவே , சமுதாயம் ,சமுதாயம் என்று நாள் தோறும் சாலை மறியல் ,ஆர்ப்பாட்டம்  , மக்களிடம் வசூல் போன்றவற்றில் தீவிரமாக உள்ள நாம் ,நம் சமுதாயத் தலைவர்கள் நம் சமுதாயம் முன்னேற செய்த பணிகள் என்ன என்பதனை சிந்தித்து பார்க்க கடமை பட்டுள்ளோம் .

    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு ,தமிழகத்தை பொருத்தவரை முஸ்லிம் சமுதாயத்திற்கென்று இருந்த ஒரே கல்லூரி 1919 - ஆண்டு வாணியம்பாடியில் ஆரம்பிக்கப் பட்ட இஸ்லாமியக் கல்லூரி ஒன்று மட்டும் ஆகும் .

     இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு , அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை ,அதன் தனித்துவத்தை அகற்றுவதற்கு  அன்றைய ஆட்சியாளர்கள் முயற்சி செய்தபோதும் , சென்னையில் முஹம்மதன் கல்லூரியின் பெயரை மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சித்த போதும் கடுமையாக  எதிர்த்து போராடிய நம் சமுதாயத் தந்தை காயிதே மில்லத்தும் அவர் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சமுதாயத் தளபதிகளும் ,சமுதாயத்தின் நிலை குறித்தும் , தங்களுக்கென்று கல்வி நிலையங்கள் வேண்டும் என்று சிந்தித்து அதனை செயல் படுத்தியும் காட்டினார்கள் . அசைத்து பார்க்க நினைத்த ஆட்சியாளர்களை , அதிரவைத்தது  நம் சமுதாயத் தலைவர்களின் செயல்பாடுகள்.

     ஆம் ,ஆட்சியாளர்களின் செயல்பாடுகளையும் , கல்வியில் நம் சமுதாயத்தின் நிலையையும் ஆலோசித்து , நமக்கென்று நாமே கல்லூரிகளை உருவாக்க முடிவு செய்தார்கள் .

   முடிவு செய்த மாத்திரத்தில் , காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் , சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது , M .M.பீர் முஹம்மது சாஹிபு போன்ற நாவன்மை மிக்க  தன் போர்படை தளபதிகளை அழைத்துக் கொண்டு ,சிங்கப்பூர் , மலேசியா  , பர்மா போன்ற நாடுகளுக்குச் சென்று நம் சமுதாய பெரு மக்களை சந்தித்து , பள்ளிவாசல்கள் தோறும் சென்று சென்று இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின் கல்வி நிலை உயர வேண்டும் என்பதனை எடுத்துக்கூறி , மடிப்பிச்சை ஏந்தி வசூல் செய்யப்பட்ட 5 லட்சம் ரூபாயை கொண்டுவந்து , அன்று பணக்காரர்கள் கூடும் ஜாலி கிளப் இருந்த இன்றைய சென்னை ராயபேட்டையில் உள்ள 12 ஏக்கர் நிலத்தை வாங்கினார்கள் .

      அவ்வாறு வாங்கப் பட்ட இடத்தில்தான் 1951 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான்  இன்று சென்னையில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் "புதுக்கல்லூரி"ஆகும் .  அப்படி உருவாக்கிய அந்த கல்லூரியின் ,ஒவ்வொரு வளர்ச்சியிலும் காயிதே மில்லத் (ரஹ் ) கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் . அதனை தொடர்ந்து வந்த சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாகிபு அவர்கள் 14 ஆண்டுகள் அந்தக் கல்லூரியின் தலைவராக இருந்து அந்தக் கல்லூரியை படிப் படியாக உயரச் செய்தார்கள் .

     இன்றைக்கும் அந்தக் கல்லூரி இன்றைய சமுதாயத்தை பார்த்து கேள்வி எழுப்பிக் கொண்டுள்ளது , அதனை இன்றைய இளைய சமுதாயம் மறந்து விடுகின்றது . வீதி தோறும் உணர்ச்சிகளை தூண்டி , வசூல் செய்கின்றீர்களே, என்னை உருவாக்கி ,என்னை வளரச் செய்த தலைவர்கள் போன்று , உங்களால் ஒரு கல்வி நிலையத்தை உருவாக்க முடியவில்லையா ? என்று கேள்வி எழுப்பிக்  கொண்டுள்ளது .

இன்ஷாஅல்லாஹ் ,கேள்விகள் தொடரும்................

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக