Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 9 ஜூன், 2013

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்

கொட்டி தீர்த்த தென்மேற்கு பருவ மழையால் குற்றாலம் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நேற்று மெயின் அருவில் 3 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்துவங்கியுள்ளது. கடந்த 3 தினங்களாக அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. விடுமுறை காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நேற்று அதிகாலை முதல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டியது.

மெயினருவியில் நேற்று அதிகாலை முதல் தண்ணீர் அதிகமாக வரத்துவங்கிய நிலையில், காலை 7 மணிக்கு தண்ணீர் ஆர்ச்சை தொட்டு விழுந்தது. மழையின் காரணமாக அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து காலை 8 மணி முதல் 11 மணிவரை மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு மெயினருவியில் ஆர்ச்சை தொட்டு ஆர்ப்பரித்து தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்.

மெயினருவி, ஐந்தருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் புலியருவியை நோக்கி படையெடுக்க துவங்கினர். 3 மணி நேரத்திற்கு பின் தடை விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் சாரலும் சற்று குறைவாக காணப்பட்டது. இருந்தபோதிலும் குளுமையான ‹ழ்நிலையும், மெல்லிய சாரலும், இதமான காற்றும் வீசியது. குற்றால சீசன் தற்போது களைகட்ட துவங்கியுள்ள நிலையில் தொடர்ந்து அருவிகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதாலும், இன்று (9ம்தேதி) விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக