Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 9 ஜூன், 2013

சேது சமுத்திர திட்டத்தை முடக்க முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தி.மு.க. தலைவர் கலைஞரின் 90-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் நடந்தது. பகுதி செயலாளர் கோ.ஏகப்பன் தலைமை தாங்கினார்.

வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 1990 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியபோது,’’அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை முடக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. 150 ஆண்டு கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

அந்த விழாவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட்டு செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அப்போதைய செயலாளர் வரதராஜன், இந்திய யூனியன் மூஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் உள்ளிட்ட தலைவர்களெல்லாம் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆனால், இந்த திட்டத்தை நிறுத்த சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது. இதை எதிர்த்து பேசாமல் வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்களெல்லாம் மவுனமாக இருப்பது ஏன்?

கடந்த 2 ஆண்டு ஆட்சியில் சட்டமன்றம் முதல்வரின் புகழ்பாடும் அலுவலகமாக செயல்படுகிறது. கேள்வி நேரம் என்பது கேலி பேசும் நேரமாக மாறிவிட்டது. தி.மு.க. ஆட்சியைவிட அ.தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்து இருப்பதாக முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால் போலீஸ் இணைய தளத்தில் பார்த்தால் கடந்த ஒரு ஆண்டில் கற்பழிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்து இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது. சமச்சீர் கல்வி தி¢ட்டத்தை தி.மு.க. கொண்டு வந்தது.

இதனால் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் அதிகமாக வெற்றி பெற்றுள்ளார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்து வரும் ஓரே இயக்கம் தி.மு.க. தான்’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக