Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 12 மார்ச், 2013

கடையநல்லூர் அடவிநயினார் அணை பகுதி சுற்றுலா ஸ்தலமாக்க நடவடிக்கை

கடையநல்லூர் அருகேயுள்ள மேக்கரை பகுதியில் அடவிநயினார் அணைக்கட்டு அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்துள்ள இந்த அணைக்கட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர். குற்றாலத்திற்கு சீசன் நேரங்களில் வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் பெருமளவில் அடவிநயினார் அணைக்கட்டு பகுதிக்கு வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

தமிழகத்தில் அணைக்கட்டு பகுதிகள் பெருமளவு சுற்றுலா ஸ்தலமாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அடவிநயினார் அணைக்கட்டு பகுதியிலும் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அச்சன்புதூர் டவுன்பஞ்.,தலைவர் சுசீகரன் அமைச்சர் செந்தூர்பாண்டியனிடம் அளித்துள்ள மனுவில் :- அச்சன்புதூர் டவுன் பஞ்.,சிற்குட்பட்ட மேக்கரை பகுதியில் அமைந்துள்ள அடவிநயினார் அணைக்கட்டு பகுதியில் சுற்றுலாத்துறை மூலமாக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி மின் விளக்குகள், அணைக்கட்டு பகுதிகளில் தார்சாலை அமைத்தல், குறவன் பாறை பகுதிக்கு தார்சாலை அமைத்தல், சிறுவர் பூங்கா மற்றும், செயற்கை நீர் வீழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அமைத்திட வேண்டுமெனவும், இதற்காக சுற்றுலாத்துறை மூலம் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் ,அச்சன்புதூர் பகுதியில்  அடவிநயினார் அணைக்கட்டு பகுதியினை சுற்றுலா ஸ்தலமாக அமைப்பதற்கும், சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கும் முதல்வர்  உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து இருப்பதாக டவுன் பஞ்.,தலைவர் சுசீகரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக