Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 12 மார்ச், 2013

+2 இயற்பியல், பொருளியல் தேர்வு 41 மாணவர்கள் பிடிபட்டனர்


பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, முக்கிய பாடத் தேர்வுகள், நேற்று துவங்கின. இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வில், மாநிலம் முழுவதும், "பிட்' உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட, 41 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.

ஏற்கனவே நடந்த தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடத் தேர்வுகளில், 66 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர். இந்நிலையில், நேற்று, இயற்பியல், பொருளியல் தேர்வுகள் நடந்தன.
வழக்கமான பறக்கும் படை குழுவினருடன், அண்ணா பல்கலை மற்றும் மாவட்டங்களில், அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்களும், தேர்வை பார்வையிட்டனர்.

தேர்வில், "பிட்' அடித்தது உள்ளிட்ட பல்வேறு தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இயற்பியல் பாடத்தில், 23 மாணவர்களும், பொருளியல் பாடத்தில், 18 மாணவர்களும் பிடிபட்டனர். வழக்கம் போல், கிருஷ்ணகிரி,
கடலூர், திருவள்ளூர், அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தான், மாணவர்கள் பிடிபட்டனர்.

அதிகபட்சமாக, தூத்துக்குடி மாவட்டத்தில், இயற்பியல் பாடத்தில், ஒன்பது மாணவர்கள், பொருளியல் பாடத்தில், மூவர் என, 12 பேர் பிடிபட்டனர். நேற்றுடன், தேர்வு முறைகேடுகளில் சிக்கிய மாணவர்கள் எண்ணிக்கை, 107 ஆக உயர்ந்தது.இயற்பியல் தேர்வு, எளிதாக இருந்தது என்றும், பாடத்திற்கு அப்பாற்பட்ட கேள்விகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பாட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, வரும் 14ம் தேதி, கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் தேர்வுகள் நடக்கின்றன. 15ம் தேதி, வணிகவியல், புவியியல் தேர்வுகளும், 18ம் தேதி, வேதியியல், கணக்குப் பதிவியல் தேர்வுகளும் நடக்கின்றன. 21ம் தேதி, உயிரியல், வரலாறு, தாவரவியல் மற்றும் வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகள் நடக்கின்றன.

வரும் 25ம் தேதி, நுண் வேதியியல் தேர்வு நடக்கிறது. 27ம் தேதி, அரசியல் அறிவியல், புள்ளியியல் தேர்வுகளுடன், பிளஸ் 2 தேர்வுகள் முடிகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக