Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 12 மார்ச், 2013

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தில் தொழில்வாய்ப்புக்கேற்ற புதிய பாடத்திட்டம்!


 "தொழில் வாய்ப்புக்கு ஏற்ப, புதிய பாடப் பிரிவுகள், வரும் கல்வியாண்டில் துவங்கப்படும்" என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக துணைவேந்தர் சந்திரகாந்தா கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தொழில்வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், திறந்தநிலை பல்கலை மூலம், புதிய படிப்புகள், 2013-14ம் கல்வியாண்டில் துவங்கப்பட உள்ளன. இளங்கலையில், தொடுசிகிச்சை அறிவியல் முறை படிப்பும், முதுகலையில், மொழியியல், மொழி பெயர்ப்பு இயல், மேம்பட்ட நிர்வாக இயல், காவல் நிர்வாகம், ஆயத்த ஆடை வடிவமைப்பு, மகளிர் இயல் படிப்புகள் துவங்கப்படுகின்றன.

மேலும், பட்டய படிப்பில், கனரக வாகன இயக்கம் மற்றும் பராமரிப்பு படிப்பும், முதுகலை பட்டய படிப்பில், ஆங்கிலத்தில் படைப்பு ஆக்கம், சிறப்பு கல்வியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட, அறிவியல் துறைகள், புதிதாக துவங்கப்பட உள்ளன. சென்னை பல்கலையில், இன்று நடக்கும் ஆறாவது பட்டமளிப்பு விழாவில், 35,432 பேருக்கு இளங்கலை பட்டமும், 6,176 பேருக்கு முதுகலை பட்டமும், 377 பேருக்கு, எம்.பில்., பட்டமும், 5,937 பேருக்கு பட்டய சான்றிதழும், 198 பேருக்கு முதுகலை பட்டய சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு சந்திரகாந்தா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக