Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 13 மார்ச், 2013

முதல் 5 இடங்களில் இந்திய விமான நிலையங்கள் :சர்வதேச ஏர்போர்ட்ஸ் கவுன்சில்


விமான பயணிகளுக்கு சிறந்த சேவை அளிப்பதில் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் இந்தியா மூன்று இடங்களை பிடித்துள்ளது. விமான பயணிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக செயல்படுவது உட்பட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணி செய்வது குறித்து சர்வதேச விமான நிலைய சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச ஏர்போர்ட்ஸ் கவுன்சில் என்னும் தன்னாட்சி பெற்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டு ஒன்றிற்கு சுமார் 40 மில்லியன் பயணிகளை கையாண்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ளஇஞ்சியோன் விமான நிலையம் முதலிடத்தையும், டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் இரண்டாம் இடத்திலும் ,மும்பை சத்ரபதி சிவாஜி சர்வ தேச விமான நிலையம் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது.

மேலும் 15 மில்லியன் மக்களை கையாண்ட வகையில் ஜப்பானின் நகோயா விமான நிலையம் முதலிடத்திலும்,ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜிவ் காந்தி விமான நிலையம் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது

ஆசிய-பசிபிக் நாடுகளின் வரிசையில் தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ளஇஞ்சியோன் விமான நிலையம் முதலிடத்தையும், சிங்கப்பூரின் சாங்காய் விமான நிலையம் இரண்டாம் இடத்தையும், சீன தலைநகர் பீஜிங் விமானநிலையம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. நான்காமிடத்தை தலைநகர் புதுடில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் பிடித்துள்ளது. ஐந்தாமிடத்தை ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜிவ் காந்தி விமான நிலையம் பிடித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக