Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 13 மார்ச், 2013

மாட்டு சாணத்திலிருந்து வாசனை திரவியம்


இந்தோனேசியா நாட்டில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் திறன் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற நாலியட், ரியூதியா என்ற பெயருடைய 2 மாணவிகள் புதிய நறுமணம் வீசும் வாசனை திரவியம் (ஏர் பிரஷ்னெர்) ஒன்றை அறிமுகம் செய்து முதல் பரிசை தட்டிச் சென்றார்கள். இவர்கள் கண்டுபிடித்த இந்த வாசனை திரவியம் எதில் இருந்து தயாரித்தார்கள் என்பதை அறிந்தால் அதிர்ந்து போவீர்கள்.

 மாட்டு சாணத்தில் இருந்தே இதை தயாரித்திருக்கிறார்கள். அதாவது ஜாவா தீவிலுள்ள பண்ணையில் இருந்து மாட்டு சாணத்தை வரவழைத்தார்கள். அதை 3 நாட்களுக்கு ஊற வைத்து நீரை பிரித்து எடுக்கிறார்கள். பிறகு அதனுடன் தேங்காய் தண்ணீரை சேர்த்து கொதிக்கவிட்டு, ‘டிஸ்டில்’ முறையில் நீராக்கி மருத்துவ மூலிகை சேர்த்து இந்த நறுமணம் திரவியத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதில் ரசாயன பொருள் சேர்க்கப்படாததால் உடல்நலத்துக்கு நல்லது. தீங்கு எதுவும் ஏற்படுத்தாது என்று மாணவிகளும், அதை பரிசோதித்த விஞ்ஞானிகளும் தெரிவித்தனர். இந்த இரு மாணவிகளும் விரைவில் இஸ்தான்புல் நகரில் நடக்க இருக்கும் கண்காட்சியிலும் பங்கேற்க தேர்வாகி இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக