Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 21 மார்ச், 2013

தமிழக காங்கிரஸ் கட்சி உடையுமா ?


இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து ஐநா மன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே அரசிற்கு எதிராக அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தில் , இலங்கை அரசு தமிழ் மக்களின் மீது செய்த குற்ற செயல்கள் குறித்து சர்வதேச விசாரணை பற்றி இந்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசிற்கு திமுக அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது .

திமுக தலைமை எடுத்த முடிவினை அக்கட்சியின் தொண்டர்களும் தலைவர்களும் வெடிவெடித்து ,இனிப்பு வழங்கி வரவேற்று கொண்டாடினர் .ஆனால் ,தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு மிக வேதனையையும் ,அதிர்ச்சியையும் கொடுத்தாக தெரிகின்றது .

1996 - ஆம் ஆண்டு  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக நரசிம்மராவ் அன்றைய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கருப்பையா மூப்பனார் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் ,மூப்பனார் "தமிழ் மாநில காங்கிரஸ் " என்ற கட்சியை துவக்கினார் .

அதன் பின்பு , திமுக பிஜேபி உடன் உடன்பாடு கொண்டதால் மூப்பனாரின் "தமாகா " அதிமுக உடன் கூட்டணி அமைத்தது . அப்போது , ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்த மூப்பனாரின் முடிவை ஏற்க மறுத்த ப.சிதம்பரம் "ஜனநாயக மக்கள் காங்கிரஸ் " என்று ஒரு கட்சியை துவக்கி திமுக உடன் கூட்டணி கொண்டு 2 எம்.எல்.ஏ- களை பெற்றார் .

  இன்றைக்கு 1996 நிலை மீண்டும் உருவாக வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள் . திமுக உடன் கூட்டணியை தொடரவே மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விரும்புகிறார் . அதிமுக உடன் கூட்டணி வைக்கவோ  அல்லது மூன்றாவது அணியை பற்றியோ ப.சிதம்பரம் விரும்பவில்லை .மேலும் , மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும் இதே நிலையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .அதன் வெளிப்பாடு தான் , இன்று மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை என்ற செய்தியை கேட்டு ப.சிதம்பரம் அதிர்ச்சி அடைந்தார் . உடனே , பிரதமரையும் அமைச்சர்களையும்  தொடர்பு கொண்டு சிபிஐ சோதனையை இடையில் நிறுத்த நடவடிக்கை எடுத்தார் என்று கூறப்படுகிறது .

ஒரு வேளை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை திமுக கூட்டணியை தொடர வழிவகை செய்ய முன்வரவில்லைஎன்றால் ,ப.சிதம்பரம் மற்றும் ஜி.கே.வாசன் தலைமையில்  மீண்டும்  தமாகா உதயமாகும் . ஜி.கே.வாசன் வராவிட்டாலும் ,ப.சிதம்பரம் தலைமையில் தமிழக காங்கிரஸ் கட்சி உடைவது உறுதி என்று கூறப்படுகிறது .

  பல்வேறு நிலைகளில் மத்திய காங்கிரஸ் அரசு நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் , திமுக விசயத்தில் என்ன முடிவை சோனியாவும் ,ராகுலும் எடுக்கப்போகிறார்கள்  என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களும் ,தொண்டர்களும் அமைதியுடன் காத்திருக்கின்றனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக