Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 21 மார்ச், 2013

முலாயம் சரத்பவாருடன் சந்திப்பு மீண்டும் மூன்றாவது அணி உதயம் ?


தி.மு.க. மத்திய அரசில் இருந்து விலகிய நிலையில், மத்திய மந்திரி பெனி பிரசாத்தை பதவி நீக்கும் பிரச்சினையில் சமாஜ்வாடி கட்சி எடுக்க இருக்கும் முடிவு ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில், காங்கிரசின் மற்றொரு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை முலாயம்சிங் யாதவ் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய அரசியலில் அணி மாற்றத்துக்கு முலாயம்சிங் முயற்சி மேற்கொண்டு வருகிறாரா? என்ற கேள்வியை இந்த சந்திப்பு எழுப்பி உள்ளது. ஆனால், அதுபோன்ற யூகங்களை இரு தலைவர்களும் மறுத்து உள்ளனர். இருவரும் கலந்துகொள்ள இருக்கும் சுதந்திரபோராட்ட தியாகி ஒருவரின் நினைவு தின நிகழ்ச்சி குறித்து விவாதித்ததாக, அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

இந்நிலையில் பெனி பிரசாத் வர்மா விவகாரம் குறித்து விவாதிக்க சமாஜ்வாடி கட்சியின் பார்லிமென்டரி கூட்டம் இன்று நடந்தது. இதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் முலாயம் சிங்கிடம் வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உரிய முடிவெடுக்கப்படும் என சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக