Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 20 மார்ச், 2013

அரசு பேருந்துகளில் கூரியர், பார்சல் சேவை அதிக வரவேற்பு

அரசு விரைவு பேருந்துகளில் துவங்கப்பட்ட கூரியர் மற்றும் பார்சல் சேவைக்கு, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து உள்ளது.அரசு விரைவு பேருந்துகளில், தபால் மற்றும் பார்சல் பொருட்களை எடுத்து செல்லும் வகையில், "வி ஸ்பீட்ஸ் லாஜிஸ்டிக்ஸ்' என்ற தனியார் நிறுவனத்திடம், கடந்தாண்டு இறுதியில், பணி ஒப்படைக்கப்பட்டது.

பேருந்துகளில் அனுப்பும் தபால் மற்றும் பொருட்களை, பேருந்து சேருமிடத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம். 250 கிராம் வரை எடையுள்ள தபால்களுக்கு, 7 ரூபாய் கட்டணமும், அதற்கு மேல், ஒவ்வொரு, 250 கிராமுக்கும், 2 ரூபாய் 50 காசு வரை வசூலிக்கின்றனர்.பார்சல் பொருட்களை பொறுத்தவரை, 2.5 கிலோவிற்கு, 25 ரூபாய் வசூலிக்கின்றனர். 7 ரூபாய்க்கு தபால் சேவை என்பதால், இந்த சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து, சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், பாரிமுனை பேருந்து நிலையம், மதுரை, திருச்சி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், வேலூர், கரூர் ஆகிய தமிழக பகுதிகள், கர்நாடக மாநிலம், பெங்களுரு என, மொத்தம், 14 இடங்களில், "செவன் டிகிரி செல்சியஸ்' என்ற பெயரில், இந்த சேவையை விரிவுபடுத்தி உள்ளனர்.இது குறித்து, கூரியர் சேவை நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு விரைவு பேருந்துகள் சென்று வரும் அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும், இந்த சேவையை விரிவுபடுத்துவதே நோக்கம். அடையாள அட்டை உள்ளவரிடமிருந்து, பார்சல் பொருட்களை பெற்று வழங்குபவரிடம், அடையாள அட்டையை சோதித்த பின்னரே, பொருட்களை ஒப்படைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக