Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 21 மார்ச், 2013

கரூர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


கரூர் மாவட்டத்தில் நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மக்களிடையே சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. அதன்படி திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி, வட்டார ஒருங்கிணைப்பாளர், கணிணி உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

அதன்படி திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு முதுகலை சமூகவியல் அல்லது ஏதாவது ஒரு முதுகலை பட்டப்படிப்பில் சமூக நலக்கல்வி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப் பாளர் பணிக்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

கணினி உதவியாளர் பணிக்கு பி.ஜி.டி.சி.ஏ, சுருக்கெழுத்து, தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

அறிக்கை:
இந்த பணிகளுக்கு 21 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். முற்றிலும் தற்காலிக பணி ஆகும்.

விருப்பம் உள்ளவர்கள் வருகிற 28ந்தேதிக்குள் கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளாச்சி முகமை அலுவலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை கூடுதல் கலெக்டர் வினய் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக