Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 17 மார்ச், 2013

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி: கருணாநிதி


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வராவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதியாக உள்ளது என அக்கட்சி தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கையில், விடுதலை புலிகளுடன் நடந்த கடைசி கட்ட போரின் போது, பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கமிஷனில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. சில நாட்களுக்கு முன்னர், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்கா விட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்இருந்து, தி.மு.க., விலகும் சூழ்நிலை உருவாகலாம்' என, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி மிரட்டல் விடுத்தார்

 மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் :
காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம். இலங்கையில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதனை இந்தியா ஆதரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார். மேலும் அவர், தமிழ் மக்களுடன் இந்தியா இருக்கும் என மாணவர்களுக்கு உறுதியளித்தார். 

இந்நிலையில் கருணாநிதி இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என தீர்மானத்தில் மாற்றம் செய்ய வேண்டும் எனக்கூறி பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என கூறினார். மேலும் அவர், இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணைக்குழு அமைக்க வேண்டும். குறுகிய காலத்திற்குள் விசாரணையை முடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் மத்திய அமைச்சரவையில் தி.மு.க., நீடிக்காது. கூட்டணியிலிருந்து விலகும் முடிவில் தி.மு.க., உறுதியாக உள்ளது. தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராவிட்டால் இலங்கை தமிழர்களுக்கு அநீதி ஏற்படும். தமிழகத்தில் சிங்களர்கள் தாக்கப்படுவது சரியல்ல எனவும் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக