Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 16 மார்ச், 2013

செல்போனில் வளர்ந்த காதல் பலாத்காரத்தில் முடிந்தது


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பொன்னாத்தி நடுத் தெருவை சேர்ந்த இளம் பெண்ணிடம்ராதாபுரத்தை சேர்ந்த ஒருவர் தன்பெயர் மணிகண்டன் (எ) பாலகுரு என்று கூறி அடிக்கடி செல்போனில் பேசிவந்தார்.

இருவரும் செல்போனிலேயே பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் கடந்த 13ம் தேதி இளம் பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி முடவன்குளம் குளம் அருகில் பலாத்காரம் செய்துள்ளார்.

சில நாட்கள் கழித்து அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு சகோதரியின் திருமணம் முடிந்ததும் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று மணிகண்டன் கூறியுள்ளார்.
இதன் பிறகு மணிகண்டன் அந்த பெண்ணிடம் செல்போனிலும் தொடர்பு கொள்ளவில்லை. அவரை வந்து பார்க்கவுமில்லை. இதனால் சந்தேகமடைந்த இளம்பெண் திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் சிவராஜ்பிள்ளை, எஸ்.ஐ. வின்சென்ட் அன்பரசி வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த மர்ம நபர் மணிகண்டனை தேடி வருகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக