Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 17 மார்ச், 2013

வரிவசூல் மையம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் : நெல்லை மாநகராட்சி


2012–2013 நிதியாண்டு 31–3–2013 ல் முடிவடைவதால் பொதுமக்கள் தங்கள் வரிகளை செலுத்துவதற்கு ஏதுவாக விடுமுறை நாட்களான சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மாநகராட்சி கணினி வரிவசூல் மையங்கள் செயல்படும்.

எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நிலுவை வைத்துள்ள சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் கடை வாடகைகளை செலுத்தி ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு முதலான நடவடிக்கைகளை தவிர்த்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான் தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக