Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 1 ஜனவரி, 2013

காயிதே ஆஜம் ,முஹம்மது அலி ஜின்னா ஒரு மதச்சார்பற்ற தலைவர் , அத்வானி மீண்டும் ஒப்புதல்


"ராமகிருஷ்ண மடத்தின் முன்னாள் தலைவர், ரங்கநாதானந்தர் கூறியதன் படியே, முகமது அலி ஜின்னாவை, மதச்சார்பற்ற தலைவர் என கூறினேன்,'' என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், நேற்று முன்தினம் அத்வானி கூறியதாவது:சிறு வயதில் நான், பாகிஸ்தானின், கராச்சி நகரில் வசித்த போது, அங்குள்ள, ராமகிருஷ்ண மடத்திற்கு செல்வது வழக்கம். அங்கு, சுவாமி ரங்கநாதானந்தரின் சொற்பொழிவுகளை கேட்பது உண்டு.
நாடு பிரிவினை அடைந்து இந்தியா வந்த பின், கோல்கட்டாவில், சுவாமியை சில முறை சந்தித்துள்ளேன். ஒரு முறை சந்திக்கும் போது, பாகிஸ்தான் அரசியல் அமைப்பு சட்ட சபையில், முகமது அலி ஜின்னா பேசியதை, சுவாமி என்னிடம் கூறினார்.

"பாகிஸ்தான் மக்கள், மத வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும்' என, ஜின்னா பேசியுள்ளதை, சுவாமி மூலம் தான் அறிந்தேன். அதன் படி தான், ஏழு ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தான் சென்றிருந்த போது, "ஜின்னாவை மதச் சார்பற்ற தலைவர்' என, கூறினேன்.இவ்வாறு, அத்வானி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக