Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 1 ஜனவரி, 2013

211 பல்கலை பணியிடங்களுக்கு 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்


மதுரை காமராஜ் பல்கலையில் எழுத்தர் உட்பட காலியாக உள்ள 211 பணியிடங்களுக்கு, 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இப்பல்கலையில், 176 எழுத்தர், 35 வாட்ச்மேன், துப்புரவு மற்றும் தோட்டப் பணியாளர் என, 211 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், டிச.,28 வரை பெறப்பட்டன. இதில், 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து துணைவேந்தர் கல்யாணி கூறுகையில், எதிர்பார்த்ததை விட ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. உரிய ஆய்வுக்கு பின் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேர்வு செய்யும் முறை குறித்து ஆலோசிக்கப்படுகிறது விரைவில் அறிவிக்கப்படும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக