Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 31 டிசம்பர், 2012

வேலை மற்றும் சம்பளம் வாங்குவதற்காக மட்டும், இளைஞர்கள், கல்வியை பயன்படுத்தாமல், மனித சமூகத்திற்கு சேவை செய்யவும் பயன்படுத்த வேண்டும் :ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

"நல்ல வேலை மற்றும் சம்பளம் வாங்குவதற்காக மட்டும், இளைஞர்கள், கல்வியை பயன்படுத்தாமல், மனித சமூகத்திற்கு சேவை செய்யவும் பயன்படுத்த வேண்டும்,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி யோசனை தெரிவித்துள்ளார்.

மும்பை பல்கலை கழகத்தில் நிகழ்ந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தற்போதெல்லாம், இளைஞர்கள், பாரம்பரிய கலாசாரம் மற்றும் மேற்கத்திய கலாசாரத்திற்கு இடையே சிக்கித் தவிக்கின்றனர். எந்தப் பக்கம் சாய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இந்த தருணத்தில், மகாத்மா காந்தி, நமக்கு போதித்த அறிவுரைகள், பல சந்தேகங்களுக்கு தீர்வை தரும். நல்ல வேலையை பெற்று விட வேண்டும் அல்லது நல்ல வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும், கல்வியை பயன்படுத்தாமல், நாட்டிற்கும், மனிதர்களுக்கும் சேவை செய்யவும் பயன்படுத்த வேண்டும். மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பண்பை வளர்க்க வேண்டும். மனிதாபிமான உணர்வு, இளைஞர்களிடையே அதிகரித்தால், சமூகத்தில் நிலவும் பல பிரிவினைகள் மற்றும் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து விடும். இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக