Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 22 டிசம்பர், 2012

சிறுபான்மையின மாணவ–மாணவிகள் தொழிற்கல்வி உதவித்தொகை புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்


சிறுபான்மையின மாணவ, மாணவிகள் தொழிற்கல்வி உதவித்தொகை புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி படிப்புக்கு சிறுபான்மை மாணவ–மாணவிகள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவிதொகை புதுப்பித்தல் ஆன்லைன் மூலம் வருகிற 31–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து மிகாமல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் கீழ் கல்வி உதவித்தொகை பெற்றிருப்பின் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

உறுதி செய்ய வேண்டும்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை மாணவ–மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு தவறாமல் அனுப்புதல் வேண்டும். விண்ணப்ப படிவத்தையும் உடன் படியிறக்கம் செய்து கையொப்பமிட்டு அத்துடன் கடந்த ஆண்டு தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள், வருமான சான்று, வங்கி கணக்கு எண் விபரங்களுடன் கல்லூரி முதல்வர் அல்லது டீனுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஆன்லைன் மூலமாகவும், அதன் விண்ணப்ப படிவங்கள் மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் முதல்வரின் அல்லது டீனின் கையொப்பத்துடன் சிறுபான்மை நல ஆணையர் முகவரிக்கு ஜனவரி மாதம் 10–ந்தேதிக்குள் அனுப்புதல் வேண்டும். மாணவ–மாணவிகளின் தங்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சிறுபான்மையினர் நல ஆணையருக்கு கல்லூரியில் இருந்து 10.1.2013–க்குள் அனுப்பப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக