Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

தமிழகத்தில் சாதிய தாக்குதல்களை தடுக்க வேண்டும்’ பிரதமரை சந்தித்து சாதி அமைப்பின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

22–12–2012 (நேற்று) அன்று பகல் 12 மணியளவில் பிரதமர் மன்மோகன்சிங்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அண்மை காலமாக தமிழ்நாட்டில் தருமபுரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து விளக்கி கூறியதுடன், இவை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார். மேலும், தருமபுரி வன்முறை சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தினார்.

அத்துடன், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டில் விதிக்கப்பட்டுள்ள கிரீமிலேயர் வருமான உச்சவரம்பை தற்போதுள்ள 4½ லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தக்கோரி மனு கொடுத்தார்.

அதற்கு பிரதமர் மன்மோகன்சிங், இவை குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பை உயர்த்துவது குறித்துப் பரிசீலனை செய்யப்படும் என்று உறுதியளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக