Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 22 டிசம்பர், 2012

இந்தியாவில் முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் 260 மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் பதிவு


டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தி வருகின்றனர்.  பெண்கள் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் குறித்து ஜனநாயக உரிமைகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 வருடங்களில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 260 பேர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் என் கூறியுள்ளது.  அவர்களில், 72 பேர் சுயேச்சைகள். மேலும், 26 காங்கிரஸ் கட்சியினரும், 24 பா.ஜனதாவினரும், 16 சமாஜ்வாடி கட்சியினரும், 18 பகுஜன் சமாஜ் கட்சியினரும் இதில் அடங்குவர்.

மகாராஷ்டிரா முதல் இடம்:
இந்த பட்டியலில் மகாராஷ்டிர மாநிலம் 41 பேருடன் முதல் இடம் பெறுகிறது.  அதனை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் 37 பேரும், மேற்கு வங்காளத்தில் 22 பேரும் இடம் பெறுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி, பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடும் அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று கோரியிருந்தது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி பேசுகையில், கற்பழிப்பு குற்ற-ச்சாட்டுகளில் சிக்கிய அரசியல்வாதிகளுக்கு அந்தந்த கட்சிகளே தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மற்றொரு புறம், தேர்தல் ஆணையமும் கடுமையான முறையில் இது குறித்து ஒழுங்கு முறையினை வகுக்க வேண்டும் என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக