Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 26 நவம்பர், 2012

சந்திரபாபுநாயுடுவை விரட்டியடியுங்கள்: சந்திரசேகரராவ் ஆவேசம்


ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்காக மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக தெலுங்கானா பகுதி மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். மெகபூப் நகர் அருகே உள்ள சூரியா பேட்டையில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சந்திரசேகரராவ் பேசியதாவது:-

தனி தெலுங்கானாவுக்காக கட்சியை காங்கிரசுடன் இணைக்க தயாராக இருந்தேன். ஆனால் காங்கிரசார் ஏமாற்றிவிட்டனர். நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். மிகப்பெரிய போராட்டம் மூலமாகத்தான் தெலுங்கானா உதயமாகும் இதற்கு யார் உதவியும் தேவையில்லை. நமது போராட்டம் மூலம் நாமே தெலுங்கானாவை உருவாக்குவோம்.

தனி தெலுங்கானாவுக்கு எதிராக இருந்த சந்திரபாபுநாயுடு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசை சேர்ந்த ஷர்மிளா ஆகியோர் இங்கு பாதயாத்திரை வருகிறார்கள். அவர்களை விரட்டி அடியுங்கள்
இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக