Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 26 நவம்பர், 2012

செல்போன் மூலம் வங்கி கணக்கை அறியும் வசதி: விரைவில் அறிமுகம்


வங்கி கணக்கை வீட்டில் இருந்தபடியோ, அலுவலகத்தில் இருந்தப்படியே ஆன்-லைன் மூலம் அறியவும் செயல்படுத்தும் வசதி தற்போது நடை முறையில் உள்ளது.

நெட் பேங்கிங் என்று சொல்லக்கூடிய இந்த வசதியை உலகின் எந்த மூலையில் இருந்தும் செயல்படுத்தலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளில் தங்களது கணக்கில் உள்ள பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றம், வங்கி இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் இந்த வசதி உதவுகிறது.

பஸ், ரெயில், விமான பயணத்தின்போது கூட வங்கி கணக்கை செயல்படுத்த முடியும். இண்டர்நெட் வசதி வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த வசதியை பெறமுடியும்.

இதன் மூலம் டெலிபோன், மின்சார கட்டணம், உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களையும் செலுத்தலாம். இனிமேல் செல்போன் மூலம் வங்கி கணக்கை செயல்படுத்தலாம். அதற்கான திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நாடுமுழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் ஜி.எஸ்.எம். வசதி பெற்ற செல்போன்களில் இந்த சேவையை பெறலாம். செல்போனில் #99 என்ற எண்ணில் பதிவு செய்தால்போதும் தங்கள் கணக்கில் என்ன சேவையை செயல்படுத்தவேண்டும் என்று கேட்டு பெறும். கணக்கில் உள்ள பணத்தை மாற்றம் செய்தல், கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு உள்ளது செக்புக் தேவை குறித்து தெரிவித்தல் உள்ளிட்ட பல செயல்பாடுகளை இதன் மூலம் பெறலாம். வங்கி சர்வர் வழியாக யு.எஸ்.எஸ்.டி. மூலமாக இந்த சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக