Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 26 நவம்பர், 2012

திருப்பூர் தொழிலாளர்களின் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு


திருப்பூரில், தொழில் பாதுகாப்பு குழு மற்றும் தொழில் கூட்டமைப்புகள் சார்பில் வரும், 28ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள, லட்சம் பேர் பங்கேற்கும் பேரணிக்கு, போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்; ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அறிவுரை வழங்கினர்.

தினமும், 18 மணி நேரம் வரை ஏற்பட்டு வரும், மின்தடையால் தொழில் துறையினர், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னையை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையில், வரும், 28ம் தேதி, லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடத்த, திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு மற்றும் தொழில் கூட்டமைப்புகள் திட்டமிட்டிருந்தன.

இந்நிலையில், தொழில் பாதுகாப்பு குழுவினர் மற்றம் தொழில் கூட்டமைப்பினர் பங்கேற்ற கூட்டம், எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், எஸ்.பி., அமித் குமார் சிங் பேசியதாவது:
மின்வெட்டு பிரச்னை தமிழகம் முழுவதும் உள்ளது. இதற்கு தீர்வு காண, முதல்வர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார். திருப்பூர் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வரும், 3, 4ம் தேதி நடக்கும், போலீஸ் மற்றும் கலெக்டர் மாநாட்டில், இதுபற்றி விவாதிக்கப்படும்.போலீசார் பற்றாக்குறையாக உள்ளனர்; கார்த்திகை தீப திருவிழாவும் வருவதால், ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பேரணிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவர். உணர்வுகளை வெளிப்படுத்த ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ளுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.பல்லடம், விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்புக்குட்டி பேசுகையில், ""அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது வாழ்வாதார பிரச்னை; அனுமதி அளிக்க வேண்டும்,'' என்றார்.தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கிஷோர் குமார் பேசுகையில், ""அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல; பிரச்னையை அரசுக்கு உணர்த்தவே போராட்டம்; திருப்பூருக்கு சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்பதே கோரிக்கை,'' என்றார்.போலீசார் அனுமதி மறுத்ததால், பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது .இக்கூட்டத்தில், தொழில் அமைப்புகளை சேர்ந்த, 32 நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக