Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 26 நவம்பர், 2012

செங்கோட்டை அருகே உள்ள 13 கண் பாலத்தை இடிக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்


செங்கோட்டை-புனலூர் இடையே அகல ரெயில்ப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக செங்கோட்டை அருகே கேரள மாநிலத்தில் உள்ள பழமை வாய்ந்த கழுதுருட்டி 13 கண் பாலத்தை இடிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு தமிழகம் மற்றும் கேரள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக பாதுகாப்பு கமிட்டியும் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அந்த பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி 13 கண் பாலம் அருகே நடந்தது.

மேலும் அந்த பாலம் குறித்து கட்டுரை, பேச்சு, கவிதை போட்டி நடந்தது. பொதுமக்கள் அளிக்கும் கருத்துகளை நாளை பாதுகாப்பு கமிட்டியை சேர்ந்த பிலிப், நாசர்கான், எடமன்ராஜ், முகமதுகான் ஆகியோர் டெல்லி சென்று பிரதமர் மற்றும் ரெயில்வே மந்திரியிடம் அளிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக