Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 13 ஜூலை, 2012

மகாராஷ்டிர காவல்துறையினரின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹமது கோரிக்கை

மகாராஷ்டிர காவல் துறையினரின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் குறித்து ஒரு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும் மத்திய வெளியுறவு மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சரு மான இ.அஹமது கோரிக்கை விடுத்துள் ளார்.

மும்பையில் உள்ள சிறை களில் காவல் துறையினரின் பாரபட்சமான மனப்பான்மை காரணமாக 339 முஸ்லிம் இளைஞர்கள் எந்த குற்ற வழக் குத் தொடர்பும் இல்லாமல் வாழ்வ தாக மகாராஷ்டிர சிறைகளில் உள்ள முஸ்லிம்கள் குறித்து டாடா நிறுவனம் நடத்திய ஆய் வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. 

முஸ்லிம்களின் கல்வி மற் றும் வாழ்க்கைத்தரம் குறித்து ஆய்வு நடத்திய சச்சார் கமிட்டி அறிக்கையில் மகாராஷ்டிர மாநி லத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 10.6 சதவீதம் என்றும், ஆனால் சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக் கையில் 32.4 பேர் முஸ்லிம்கள் என்றும், ஓர் ஆண் டுக்குள் சிறையில் இருக்கும் முஸ்லிம் கள் எண்ணிக்கை 42 சதவீதம் என்றும் சுட்டிக் காட்டியது. 

மக்கள் தொகையின் விகி தாச்சாரத்தில் பொருந்தும்படி இல்லாமல் இப்படி மகாராஷ்டிர மாநில சிறைச் சாலைகளின் புள்ளி விவரம் காரணமாக அது குறித்து உரிய ஆய்வு நடத்தி உண்மையை வெளிக் கொணர வேண்டும் என மகாராஷ்டிர அரசுக்கு மாநில சிறுபான்மை கமிஷன் வலியு றுத்தியது. 

அதைத் தொடர்ந்து டாடா நிறுவனத்தின் சமூகவியல் ஆய்வு பிரிவு ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தது. அந்தக் குழுவில் மத்திய அரசு மத்திய குற்றவியல் மற்றும் நீதித்துறை சேர்ந்த டாக்டர் விஜயராகவன் மற்றும் ரோஷினி நாயரும் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவி னர் மகாராஷ்டிர சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ் லிம்கள் பற்றி ஆய்வு செய்தது. 

ஆய்வுக்குழு அறிக்கை

அந்த ஆய்வுக்குழு தனது அறிக்கையை மகாராஷ்டிர அரசிடம் தாக்கல் செய்தது. அந்த ஆய்வறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: மகாராஷ்டிர சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் பெரும் பான்மை யானவர்கள் எந்த குற்ற குழு வினரிடமும் தொடர்பு இல்லாத வர்கள். அவர்கள் முஸ்லிம் சமு தாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே போலீசாரின் பாரபட்சமான கண்ணோட்டம் காரணமாக கைது செய்யப் பட்டு, சில வழக்குகளில் தொடர்பு படுத்தப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர சிறையில் இருப் பவர்களில் 96 சதவீத முஸ்லிம் கள் தடுப்பு நடவடிக் கையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள். எனவே அவர்கள், சட்டத்தை குலைக்க கூடியவர்கள் என்ற குற்றச்சாட்டை அவர்கள் மீது சுமத்த முடியாது.

குறிப்பாக 18 வயதிலிருந்து 30 வயதுள்ள 339 முஸ்லிம் இளைஞர்கள் 15 சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எந்த குற்ற குழு வையும் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்களுக்கு எதிராக எந்த குற்றப் பின்னணி ஆவணமும் இல்லை. இவர்களில் 25.4 சத வீதத்தினர் தாங்கள் நிரபராதி கள் என்று நிரூபித்து சிறையி லிருந்து வெளிவர வழக்குறை ஞர்களை வைத்து ஏற்பாடு செய்ய வசதியற்றவர்கள். 

இவ்வாறு அந்த ஆய்வறிக் கையில் கூறப்பட்டிருந்தது.

மணிச்சுடர், பிறைமேடை செய்தி

டாடா நிறுவன ஆய்வறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பரபரப்பான அந்த தகவல்கள் குறித்து ஆய் வறிக்கையின் விவரங்களை ``மணிச்சுடர் நாளிதழ்�� 24.6.2012 அன்று முதல் பக்கத் தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது.

``பிறைமேடை�� ஜூலை 1-15 இதழ் காவல்துறையின் பாரபட்ச மான நடவடிக்கைகள் காரண மாக மகாராஷ்டிரா மாநில சிறை களில் 3ஆயிரம் முஸ்லிம்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டி ருந்தது.

இ.அஹமது கடிதம்

டாடா நிறுவனத்தின் ஆய் வறிக்கை குறித்து 2012 ஜூன் 24ம் தேதி ``தி ஹிந்து�� நாளி தழும் செய்தி வெளியிட்டிருந் தது. இவைகளைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சருமான இ.அஹமது சாஹிப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப் பதாவது:

டாடா நிறுவனத்தின் ஆய் வறிக்கை மஹாராஷ்டிரா மாநி லத்தில் முஸ்லிம்கள் காவல் துறையினரின் பாரபட்சமான நடவடிக்கைகளால் அங்குள்ள முஸ்லிம்கள் எவ்வாறு பாதிக் கப்பட்டுள்ளனர் என்பதை ``தி ஹிந்து�� நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் (முஸ்லிம்கள்) சொல்ல முடியாத துன்பங்களுக்கும், துயரங் களுக்கும் ஆள்படுத்தப்பட்டு அவர்களுக்கு நீதி மறுக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சி அளிக் கக் கூடிய நிலை மகாராஷ்டிர மாநிலத்தின் காவல்துறையின ரால் ஏற்பட்டுள்ளது.

சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய காவல்துறை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கெதி ராக பாரபட்சமாக நடந்து கொள் வதும், அவர்களுக்கு விசார ணைக்கு உட்பட சந்தர்ப்பம் வழங்காமல் நடந்து கொள்வது மிகவும் அவமானகரமானது.

எனவே, பிரதமர் இதில் தலையிட்டு உதவி இழந்து தவிக்கும் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் ஒரு உயர்மட்ட விசாரணைக்கு உத் தரவிட வேண்டும் என்று கேட் டுக்கொள்கிறேன்.

மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிறுபான்மை யின மக்களுக்காக ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. காவல்துறையினர் போன்றவர்களால் பாரபட்சமான நடவடிக்கைகள் அப்படிப்பட்ட நலத்திட்ட உதவிகளின் பயன் களை அழித்து விடும். 

முஸ்லிம் சமுதாயத்திற் கெதிராக பாரபட்சமாக நடந்து கொள்ளும் அதிகாரிகளை சட்டத்துக்கு பதில் சொல்ல வைக்க வேண்டும். இவ்வாறு இ.அஹமது சாகிப் தமது கடிதத்தில் குறிப்பிட் டிருந்தார்.

பிரதமர் மன்மோகன்சிங் பதில்

பிரதமர் மன்மோகன் சிங் இ.அஹமது சாஹிபுக்கு எழு தியுள்ள பதில் கடிதத்தில், ``இந்த விஷயம் மஹாராஷ்டிரா முதல் வருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் தக்க நட வடிக்கை எடுக்கும்படி கேட் டுக்கொண்டிருப்பதாக கூறப் பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக