Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 12 ஜூலை, 2012

தீண்டாமையை ஆதரிக்கும் தமிழக அரசு ?

திமுக தலைவர் கலைஞர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

ஸ்ரீவில்லிப்புத்தூர் கம்மாபட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஒன்றில் ஆதிதிராவிடர் பெண்கள் சத்துணவு சமைத்த காரணத்தால், வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு மாணவர்களை, பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று தடுத்துள்ளனர்.அதைவிடக் கொடுமை, வேற்றுச் ஜாதியினரின் எதிர்ப்புக்கு அரசு பணிந்து, சத்துணவுக் கூடத்தில் பணிபுரிந்து வந்த, ஆதிதிராவிடர் ஊழியர்களான மரகதவல்லி, வீரலட்சுமி ஆகியோரை, அங்கிருந்து பணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். தீண்டாமைக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. இந்த அலுவலர்களை மாற்றம் செய்துள்ள இடத்திலும், இது போலவே வேறு ஜாதியினர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட விட மறுத்தால், அப்போது அரசு என்ன செய்யும்?இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக