Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 29 ஜூன், 2012

பிடிவாரன்ட் திருமாவளவனுக்கு .....!

 கொலை முயற்சி, பஸ்ஸைத் தீ வைத்து எரித்த வழக்கில் விழுப்புரம் கோர்ட் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.  
÷கடந்த 1.6.2008-ல் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அரசு போக்குவரத்து கழக பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் விழுப்புரம் வழுதரெட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் மோகன், வளவனூரைச் சேர்ந்த நடத்துனர் ஆறுமுகம் ஆகியோர் பணியில் இருந்தனர். ÷திருபுவனை பஸ் நிறுத்தத்தில் பஸ்ûஸ நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டபோது, சுமார் 20 பேர் கொண்ட கும்பல் பஸ்ஸில் ஏறியது. அருகே உள்ள எஸ்.ஆர்.பாளையம் கிராமம் வந்த போது பஸ்சில் வந்த 15 பேர், ஓட்டுநர் மோகனைத் தாக்கி பஸ்ûஸ நிறுத்துமாறு கூறினர்.
÷பின்னர், கடலூரில் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே தலைவர் திருமாவளவன் கூறியது போல் பஸ்ûஸ சேதப்படுத்துங்கள் என்று கூறியவாறு பஸ்ûஸ சேதப்படுத்த முயன்றனராம்.
÷இதைத் தடுக்க முயன்ற நடத்துனர் ஆறுமுகத்தை ஆயுதங்களால் வெட்டியதுடன் ஓட்டுநர் மோகனையும் கட்டையால் தாக்கினர். மேலும், பஸ் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதுடன் பஸ்சிற்கும் தீ வைத்து விட்டு, ஆறுமுகத்திடம் இருந்த வசூலான தொகை ரூ.5,500-யும் பறித்துச் சென்றனர்.
÷இது குறித்த புகாரின் பேரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 20 பேர் மீது வளவனூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர்.
 இந்நிலையில் விழுப்புரம் நீதிமன்றம் 2-ல் இவ்வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.  அப்போது, விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த சுரேந்திரன், சித்தாமூர் சுப்பிரமணி, பாசறை பாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி எல்.கலைவாணி உத்திரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக