Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 17 ஜூலை, 2013

கடலியல் எனப்படும் ஓசனோகிராபி

 படிப்பவருக்கு ஆர்வத்தை மேலும் மேலும் துõண்டக்கூடிய துறை இது. பெருங்கடல் பற்றிய படிப்பு என்பதால் எப்போதும் கடலில் தான் இருக்க வேண்டுமோ என எண்ண வேண்டாம். கடலோரங்கள், கடல் நீர், கடல் படுகை, ஆற்றல் வளங்கள், உயிர்வளங்கள், என கடல் தொடர்பான பலவற்றைப் பற்றியும் ஆழமாக படிப்பதே இத்துறை. உயிரியல், வேதியியல், நிலவியல், நிலஇயற்பியல், கணிதம், பொறியியல் என அனைத்துத் திறன்களும் இப்படிப்பு படிப்பவருக்கு தேவைப்படுகிறது.

கடலியல் கெமிக்கல் ஓசனோகிராபி, ஜியாலஜிகல் ஓசனோகிராபி, பயாலஜிகல் ஓசனோகிராபி, பிசிகல் ஓசனோகிராபி என சிறப்புப் படிப்புப் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. கடலுக்கு அடியிலுள்ள வேதியியலைப் படிப்பது கெமிக்கல் ஓசனோகிராபி. கடல் மட்டத்திற்கு அடியிலுள்ள பூமியின் மேற்பரப்பைப் பற்றிப் படிப்பது ஜியாலஜிகல் ஓசனோகிராபி. கடல்களுக்கு அடியிலுள்ள உயிர்களைப் பற்றி, அதாவது, மரைன் லைப் பற்றிப் படிப்பது பயாலஜிகல் ஓசனோகிராபி. அலைகள், தட்பவெப்பம், உப்புத் தன்மை போன்றவற்றைப் பற்றிப் படிப்பது பிசிகல் ஓசனோகிராபி.

பேக்கேஜிங், மரைன் மார்க்கெட்டிங் மற்றும் மரைன் ஏற்றுமதி போன்ற துறைகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் சிறப்பான வேலை வாய்ப்புகள் இந்தப் படிப்பை முடிப்பவருக்குக் கிடைக்கின்றன. மேலும் ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா, தட்பவெப்பத் துறைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் அமைப்புகளிலும் நல்ல வேலைகளைப் பெற முடிகிறது.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி பெற்ற கிராமம்

மகாராஷ்டிராவில் பழங்குடியின கிராமத்துக்கு, நாடு சுதந்திரம் அடைந்த, 65 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, மின்சார வசதி கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியை, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், கிராம மக்கள் கொண்டாடினர்.

மகாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசின் பிருத்விராஜ் சவான், முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின், கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள, அடர்ந்த வன மற்றும் மலைப் பிரதேசங்களுக்கு நடுவில், கரான்சி என்ற குக்கிராமம் உள்ளது.

சிம்னி விளக்குகள்:
பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், மின்சார வசதியே இல்லை. மின்சாரம் இல்லாததால், தெரு விளக்குகள் இருப்பது இல்லை. வீடுகளில், மண்ணெண்ணெய் மூலம் எரியும், சிம்னி விளக்குகள் தான், கண் சிமிட்டும். தங்கள் கிராமத்துக்கு, மின்வசதி செய்து தரக் கோரி, இந்த கிராம மக்கள், ஒவ்வொரு அலுவலகமாக படியேறியும் பயன் கிடைக்கவில்லை."அடர்ந்த மலை மற்றும் வனப் பகுதிகளுக்கு நடுவில், மின் கம்பங்களை அமைத்தால் மட்டுமே, மின்சார வசதியை ஏற்படுத்த முடியும். அது, இப்போது சாத்தியமில்லை' எனக் கூறி, அதிகாரிகள், தட்டி கழித்து வந்தனர்.இந்நிலையில், கடும் முயற்சி, போராட்டங்கள் காரணமாக, நாடு சுதந்திரம் அடைந்து, 65 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, இந்த கிராமத்துக்கு தற்போது, மின்சார வசதி கிடைத்துள்ளது. இதற்கான துவக்க விழா, சமீபத்தில் நடந்தது. முதல் முறையாக, தங்கள் கிராமத்துக்கு மின்சார வசதி கிடைத்துள்ளதை, அந்த கிராம மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

மகிழ்ச்சி:
மகாராஷ்டிரா மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கரான்சி கிராமம், இதுவரை இருளில் மூழ்கியிருந்தது. கிராம மக்களின் தொடர் முயற்சி காரணமாக, தற்போது, மின்சார வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதற்காக, மின்துறை அதிகாரிகள், மிகவும் சிரமப்பட்டனர். இந்த கிராமத்துக்கு மின்வசதி கிடைத்ததில், அங்குள்ள மக்களை விட, நாங்கள் தான் அதிகம் சந்தோஷப்படுகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார். 

வீட்டுமனை கேட்டு குவிந்த மக்கள்


வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டதால், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகம் திக்குமுக்காடியது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பஞ்சாயத்து யூனியனுகுட்பட்ட வேகுபட்டியில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு (சர்வே எண்:234/2) இடத்தில், அதே பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித்தொழில் செய்துவரும், 50 குடும்பத்தினர் குடிசைகள் அமைத்து, ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர். குடியிருப்புகளுக்கு பட்டா இல்லாததால், மின் இணைப்பு உள்ளிட்ட சலுகைகள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

நீர்நிலை புறம்போக்கு என்பதால் பட்டா வழங்க வருவாய்த்துறையினர் மறுத்து வருகின்றனர். நீர்நிலை புறம்போக்கு பகுதி என்பதை, நஞ்சை அல்லது தரிசு என வகைமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே, பட்டா வழங்குவதாக கூறியுள்ளனர்.இதையடுத்து நீர்நிலை புறம்போக்கு இடத்தை வகை மாற்றம் செய்வதற்காக, தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுமாறு வேகுபட்டி பஞ்சாயத்து நிர்வாத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட பஞ்சாயத்து நிர்வாகம், தொடர்புடைய நீர்நிலை புறம்போக்கு இடத்தை தரிசு நிலமாக வகைமாற்றம் செய்து ஆணை பிறப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.மாதங்கள் பல கடந்தும் இதுவரை வகைமாற்றம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த வேகுபட்டி கிராம மக்கள், பெண்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதுபோன்று புதுக்கோட்டை நகராட்சிகுட்பட்ட சந்தைப் பேட்டையில் குடிசைகள் அமைத்து ஆண்டாண்டு காலமாக குடியிருந்து, துப்புரவுத்தொழில் செய்துவரும் குறவர் மற்றும் அருந்ததியினர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மக்கள், தங்களுடைய குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இவ்வாறு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வேகுபட்டி கிராம மக்கள் மற்றும் புதுக்கோட்டை நகர்ப்பகுதி மக்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து முற்றுகையிட்டதால், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் நேற்று திக்குமுக்காடியது. இவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனோகரன் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

செவ்வாய், 16 ஜூலை, 2013

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் டெக்னிகல் காலி இடங்கள்

இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஒரு பொதுத் துறை நிறுவனமாகும்.  மின் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த நிறுவனம் 1987ல் நிறுவப்பட்டது.

இந்த நிறுவனத்தின் குஜராத் கிளையில் ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் உள்ள பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகளும் காலி இடங்களும்
என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தின் ஸ்டைபண்டரி காலி இடங்கள் டிப்ளமோ ஹோல்டர், பி.எஸ்.சி., ஹோல்டர், பிளாண்ட் ஆபரேட்டர், பிட்டர்  மெஷின்ஸ்ட் என்ற நான்கு பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன.  இவற்றில் முதல் பிரிவில் 21 இடங்களும், இரண்டாவது பிரிவில் 21 இடங்களும், பிளாண்ட் ஆபரேட்டர் பிரிவில் 45 இடங்களும், மெஷினிஸ்ட் பிரிவில் 49 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்
முதல் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராகவும், மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

டிப்ளமோ ஹோல்டர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிகல், எலக்ட்ரானிக்ஸ் அல்லது கெமிக்கல் பிரிவில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மூன்று வருட டிப்ளமோ படிப்பை தொடர்புடைய துறையில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரண்டாவது பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்.சி., படிப்பை இயற்பியல் அல்லது வேதியியலில் முடித்திருக்க வேண்டும்.  பிளான்ட் ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ப்ளஸ்டூவிற்கு நிகரான படிப்பை முறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும்.

மெஷினிஸ்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் அல்லது மெஷினிஸ்ட் பிரிவில் ஐ.டி.ஐ., சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.  மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் உயரம் குறைந்த பட்சம் 160 செ.மி.,யும், எடை குறைந்த பட்சம் 45.05 கிலோவும் இருக்க வேண்டும்.

பிற தகவல்கள்
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 31.07.2013க்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

முழுமையான தகவல்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 31.07.2013

இணையதள முகவரி: www.npcil.nic.in/main/JobsRecent.aspx

கர்ப்பிணிகளுக்கு இலவச மருத்துவ வசதி: மத்திய அரசு திட்டம்

"கர்ப்பிணி பெண்களுக்கு, இலவச மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி ஆகியவற்றை மத்திய அரசு வழங்கும்,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

ஜெய்ப்பூரில், நிருபர்களுக்கு பேட்டியளித்த, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் கூறியதாவது: ஜனனி சுரக்ஷா திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு, பிரசவத்தின் போது, இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பிரசவத்திற்கு பின் தாய் மற்றும் சேய் நலனை பேணி காக்க, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

 பிறந்த பச்சிளம் குழந்தைக்கு, ஓராண்டு காலத்திற்கு தேவையான இலவச மருத்துவ வசதிகள் வழங்கப்படும். 16 வயது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ரத்த சோகை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். புதிதாக நியமிக்கப்படும் டாக்டர்கள், கிராமப்புறங்களில் பணியாற்ற மறுக்கின்றனர். இதை தடுக்க, எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான களப்பயிற்சியை, கிராமப்புறங்களில் மேற்கொள்ளும் வகையில், நடைமுறை கொண்டு வரப்படும். தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் நியமிக்கப்படும் டாக்டர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் கூடுதல் சம்பளம், சலுகையாக வழங்கப்படும். இவ்வாறு, குலாம் நபி ஆசாத் கூறினார்.

திங்கள், 15 ஜூலை, 2013

அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவருக்கு பல்வேறு உதவிகள்

  "அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும், பி.சி., எம்.பி.சி., சீர்மரபின மாணவ, மாணவியருக்கு, அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது' என, தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்படி படிக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு, அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.


எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கப்படும் உதவித்தொகையை பெற, முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம், ஒரு லட்சத்துக்குள் இருக்க வேண்டும். உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் வழங்க வேண்டும்.
மேலும் விபரம் அறிய, தஞ்சை கலெக்டர் அலுவலகத்திலுள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும்.

மதுரையிலிருந்து துபாய், சிங்கப்பூருக்கு அடுத்த ஆண்டுக்குள் நேரடி விமான சேவை

"மதுரையிலிருந்து துபாய், சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை அடுத்த ஆண்டுக்குள் துவக்கப்படும்,''என, மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டையில் அவர் கூறுகையில்,"" மதுரை ஏர்போர்ட்டை விரிவுபடுத்தி, 12 ஆயிரம் அடிக்கு புதிய "ரன் வே' அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்கு தேவைப்படும் 615 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு கையகப்படுத்தி கொடுத்தால், உடனடியாக "ரன் வே' அமைக்கும் பணி துவக்கப்படும். இதற்காக, ஏர்போர்ட் அருகே உள்ள மதுரை- அருப்புக்கோட்டை ரோட்டிற்கு, மாற்று வழி அமைக்க வேண்டும்.


 மதுரை - சிங்கப்பூர், துபாய் நாடுகளுக்கு நேரடியாக விமான சேவை துவங்க, ஏர் இந்தியா நிறுவனத்துடன் பேசப்பட்டுள்ளது. பைலட் உட்பட பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், அடுத்த ஆண்டிற்குள் இந்த விமான சேவை துவக்கப்படும்,'' என்றார்.